Followers

Friday, October 16, 2015

பயண அனுபவம்


வணக்கம்!
          தொடர் பயணம் செய்து வந்தமையால் காலையிலேயே உங்களுக்கு பதிவை தரமுடியவில்லை. கோயம்புத்தூரில் இருந்து காலையில் தான் தஞ்சாவூர் வந்தேன். பதிவில் சொல்லும் ஊர்களைவிட சொல்லாத ஊர்களுக்கு அதிகமாக சென்று வருகிறேன். அனைத்தும் திடீர் பயணங்களாக இருப்பதால் பதிவில் சொல்லமுடிவதில்லை.

பயண அனுபவத்தைப்பற்றி சொல்லுவதற்க்கும் ஒரு சில காரணங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு அனுபவத்தையும் இங்கே சொல்லும்பொழுது அதனை படித்துவிட்டு அதில் இருந்து ஒன்றை நீங்கள் தெரிந்துக்கொள்ளமுடியும்.

பல பதிவுகளில் கெடுதலான நேரம் வரும்பொழுது எச்சரிக்கையுடன் செயல்படுங்கள் என்று சொல்லிக்கொண்டே வருகின்றேன். உங்களுக்கு நன்றாக சோதிடம் தெரிந்தும் கூடு நீங்கள் கோட்டையை விடும்பொழுது கிரகங்கள் உங்களை எப்படி சாமார்த்தியமாக ஏமாற்றுகிறது என்பது புரிகிறது. 

பணத்தை இழப்பவர்கள் அதிகம் பேர் இருக்கின்றார்கள். சோதிடத்தில் இந்த காலக்கட்டத்தில் எதுவும் செய்யகூடாது என்று சொன்னால் கூட அந்த காலக்கட்டத்தில் தான் நான் செய்வேன் என்று விடாப்பிடியாக செய்கிறார்கள்.

சனி கிரகம் ஏழில் வரும்பொழுது உங்களுக்கு தெரியாமலேயே பல வேலைகளை பார்த்துவிட்டு செல்லும் அதன் பாதிப்பு அஷ்டமசனியின் காலத்தில் தான் தெரியவரும். இதேப்போல் ஜாதகத்தில் கிரகங்களால் பல பாதிப்பு இருக்கின்றது அதனை பார்த்து தெரிந்துவிட்டு அதன் பிறகு உங்களின் செயல்பாடு இருக்கட்டும். போனபிறகு எதனை செய்தாலும் திரும்பிவருவது என்பது நடக்காத ஒன்று.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: