Followers

Friday, October 16, 2015

பிறப்பை தேர்ந்தெடுக்கும் மக்கள்


ணக்கம்!
          பொதுவாக இன்றைய காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மருத்துவர்கள் நல்ல நாளை தேர்வு செய்துக்கொண்டு வாருங்கள் அந்த நாளில் ஆப்ரேஷன் செய்து எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லுகிறார்கள். அதன்படி மக்களும் சோதிடர்களை நாடி தேதியை குறித்து அந்த நாளில் குழந்தையை ஆப்ரேஷன் செய்து எடுத்துக்கொள்கிறார்கள்.

எப்படி குழந்தையை நல்ல நாளில் எடுத்தாலும் அதற்கு வரவேண்டிய பிரச்சினை எதுவும் மாறாமல் தான் வருகின்றது. இவர்கள் தேதியை குறித்து எடுத்தாலும் பிரச்சினை வராமல் இருப்பது இல்லை. இதனை எல்லாம் மீறி பல விசயங்களை கடவுள் நமக்கு காட்டிவிடுகிறார்.

பொதுவாக நான் சோதிடம் பார்த்தால் ஜாதகத்தை மட்டும் பார்த்து பலனை சொல்லுவதில்லை. சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேசி அதற்கு தகுந்தார் போல் பரிகாரத்தை சொல்லுவது உண்டு. ஏன் இப்படி செய்கிறேன் என்றால் பிறப்பில் இருக்கும் நிறைய சந்தேகத்தை கொண்டு தான் இதனை செய்கிறேன்.

நாம் என்ன தான் நல்ல நாளை தேர்ந்தெடுத்து பிறப்பை நடத்தினாலும் நமது ஜாதகத்தில் எதாவது ஒரு இடத்தில் கடவுள் ஒரு ஓட்டையை வைக்காமல் இருக்கமாட்டார். அது பூதகரமாக கிளம்பி பிரச்சினையை கொடுத்துவிடும்.

பிறப்பை தேர்ந்தெடுத்தாலும் அந்த குழந்தை நன்றாக வளர்ந்து நல்ல வாழ்வை அடையவேண்டும் என்றால் அந்த குழந்தைக்கு என்று தனியாக தர்மம் செய்யுங்கள். அது குழந்தையை காக்கும்.

நீங்களும் சோதிடபலனை சொல்லும்பொழுது சம்பந்தப்பட்ட நபர்களிடமும் கொஞ்சம் பேசிவிட்டு பலனை சொல்லி நல்ல ஆலோசனையை வழங்குங்கள். 

புதுக்கோட்டை பகுதியில் உள்ள நண்பர்கள் சந்திக்க வேண்டும் என்றால் தொடர்புக்கொள்ளுங்கள். நாளை (17.10.2015 சனிக்கிழமை) புதுக்கோட்டைக்கு வருகிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: