Followers

Sunday, October 25, 2015

பரிகாரம்


வணக்கம்!
          சோதிடர்களை தேடி வருகின்றார்கள் என்றால் சும்மா வருவதில்லை. ஏதோ ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொண்டு அதில் இருந்து மீண்டு வருவதற்க்கு தான் வருகின்றார்கள். நான் பழைய காலத்தில் ஏதாவது செய்வது போல் செய்வார் என்றும் பல நண்பர்கள் என்னை அணுகுவது உண்டு.

இன்றைய காலத்தில் நாம் ஏதாவது செய்துவிட்டு பிறகு பணத்தை வாங்கிக்கொள்ளலாம் என்று நினைத்தால் ஏமாறுவது நானாக தான் இருக்கும். அவர்கள் பணம் தரவேண்டும் என்று தான் நினைக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு கொடுப்பதற்க்கு நேரம் இருப்பதில்லை.

கடன்பட்டவர்களுக்கு கடனை அடைக்க நான் வழி செய்து கொடுத்தால் அவர்கள் சொல்லுவது நான் வாங்கிய பணத்தை எல்லாம் கடனுக்கே கொடுத்துவிட்டேன். உங்களுக்கு பிறகு தருகிறேன் என்று சொல்லுவார்கள். 

ஒரு சிலரிடம் அன்றைய தேதிக்கு அன்றாட செலவுக்கு கூட இல்லாமல் என்னை சந்திப்பவர்கள் உண்டு. இந்த நிலைமையில் நீங்கள் செய்யவேண்டியது கோவிலாக பார்த்து அலைந்து அதில் இருந்து மீண்டு வாருங்கள் என்பதை சொல்லிவிடுவேன் அந்த நிலையில் இருந்து மீண்டு வருவதற்க்கு கோவிலுக்கு சென்று வழிபடுவதை தவிர வேறு வழி இருக்கமுடியாது.

பணம் இல்லாமல் பணத்தை சம்பாதிப்பது என்பது கடினமான ஒன்று. பணத்தை கொடுத்து தான் பரிகாரம் செய்யமுடியும். தொழில் செய்பவர்களுக்கு எல்லாம் இலவசமாக செய்துக்கொடுக்கிறார் என்று பல பேர் நானும் தொழில் செய்கிறேன் என்று வந்தார்கள். நான் ஒன்றுமே செய்யவில்லை. பணம் இல்லாமல் ஒருபோதும் பரிகாரம் செய்வதில்லை.

நீங்கள் ஒரு பரிகாரத்திற்க்கு கொடுக்கின்ற பணத்தில் முக்கால்வாசி நான் பாக்கியஸ்தானம் சொல்லும் இடத்திற்க்கு கொடுத்தால் மட்டுமே பரிகாரம் செய்யமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: