Followers

Thursday, October 8, 2015

பாக்கியஸ்தானத்தில் சூரியன்


வணக்கம்!
         ஒரு கிராமத்தில் சோதிடம் பார்க்க சென்று இருந்தபொழுது அந்த வீட்டு பையனுக்கு ஒன்பதாவது வீட்டில் சூரியன் இருந்தது. ஒன்பதாவது வீட்டில் இருந்த சூரியன் இளம் வயதில் அவரின் தந்தையை பறித்தது. அதாவது அவர் இளம்வயதில் இறந்துவிட்டார். இதயகோளாறு நோய் சம்பந்தமாக இறந்துவிட்டார்.

மூன்று பெண் குழந்தைகள் இந்த பையன் தான் அவர்களை காப்பாற்றவேண்டும். பையனின் தந்தை எந்த சொத்தும் சேர்க்கவில்லை ஆனால் அவர் நிறைய புண்ணியம் செய்து இருக்கிறார். அவரை பெயரை சொன்னாலே பல பெயர் உதவ முன்வந்தார்கள்.

பையனுக்கு பள்ளி கல்வி முடித்த நிலையில் அவரின் தந்தை இறந்த காலத்தில் அந்த ஊரில் உள்ளவர்கள் பையனுக்கு கல்வி உதவி செய்து படிக்கவைத்தார்கள். அந்த பையன் நன்றாக படித்து தற்பொழுது நல்ல நிலையில் இருக்கிறார் அந்த குடும்பத்தில் உள்ளவர்களும் நல்ல நிலையில் இருக்கின்றார்கள். இதனை எதற்கு சொல்லவருகிறேன் என்றால் முக்கால்வாசி பேருக்கு பாக்கியஸ்தானத்தில் அமரும் சூரியன் அவர்களின் தந்தையை பறித்துவிடுவார்.

தந்தை புண்ணியம் செய்து இருந்தால் வாரிசு நன்றாக வாழ்வார்கள். புண்ணியம் செய்யவில்லை என்றால் வாரிசுகளின் கதி சிக்கலாக தான் இருக்கும்.

ஒரு சில தந்தை புண்ணியம் சேர்க்காமல் இருப்பவர்களின் வாரிசும் நன்றாக தான் இருப்பார்கள். என்ன சேர்த்த சொத்தை விற்று நாளை தள்ளிக்கொண்டு இருப்பார்கள். ஒரு காலத்தில் முடிவு நிலை என்ற ஒன்று ஏற்பட்டு வீதிக்கு வருவார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

KJ said...

Sir,

If Suriyan itself comes as Bagyasthanathypathy, what would be effect?

Thanks
KJ