Followers

Saturday, October 17, 2015

தான தர்மம் வெற்றியை தரும்


ணக்கம்!
          இது கலியுகம் மனிதர்களின் குணம் என்ன என்பது தெரிந்த ஒன்றே. அப்படி இருந்தும் ஒரு சில மனிதர்களிடம் இருக்கும் தர்ம சிந்தனையால் இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு சில அப்பாவி மக்களாலும் இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.

மனிதனிடம் தர்ம சிந்தனை இருந்தால் தான் அவனுக்கு காரியம் தடை இல்லாமல் நடக்கும் என்று தெரிந்தே தான் ஒன்பதாவது வீட்டை தேர்ந்தெடுத்து வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் தர்மம் செய்தால் பாக்கியஸ்தானம் நன்றாக வேலை செய்யும் என்று காட்டிவிட்டார்கள்.

கேரளாவில் நீங்கள் ஏதோ ஒரு காரியத்திற்க்கு பரிகாரம் செய்ய சென்றால் முதலில் அவர்கள் செய்வது தானம் செய்ய வைப்பார்கள். ஏதாவது ஒரு தானத்தை முன் நிறுத்துவார்கள். உங்களை செய்யசொல்லுவார்கள் அப்படி இல்லை என்றால் அவர்களே உங்களிடம் பணத்தை வாங்கி செய்வார்கள்.

இதனை ஏன் செய்வார்கள் என்றால் அப்பொழுது தான் அவர்கள் செய்யும் பூஜை வெற்றியை தரும். காரிய தடை இல்லாமல் காரியம் நடைபெறவேண்டும் என்று சொல்லுவார்கள். நீங்கள் எந்த வேலை செய்தாலும் முதலில் இப்படி தானம் செய்துவிட்டு செயலை தொடங்கினால் உங்களுக்கு வெற்றி தேடிவரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: