Followers

Tuesday, March 27, 2018

சிறப்பு பதிவு 2


வணக்கம்!
          ஒரு பதிவுக்கே நல்ல வரவேற்பு இருக்கின்றது. இதேப்போல அனைத்து பதிவுகளும் இருக்கும்.  கட்டண பதிவில் அனைவரும் சேரவேண்டும் என்ற வேண்டுகோளை அன்போடு உங்களிடத்தில் வைக்கிறேன்.

நீங்கள் செலுத்தும் கட்டணம் உங்களின் ஜாதகத்திற்க்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஒரு பூஜை இலவசமாக நடத்திக்கொடுக்கபடும். ஆப்பர் கொடுத்து சேரவைக்கும் முயற்சி என்பதைவிட பதிவுகளில் சொல்லப்படும் விசயத்திற்க்கு கண்டிப்பாக அதற்கு நீங்கள் இதனை செய்யவேண்டும் என்று வரும்பொழுது அது பயன்படும் என்பதற்க்காக இதனை அறிவிக்கிறேன்.

இராமனா அல்லது இராவணனா என்று சொல்லுவதைவிட இரண்டையும் எடுத்துக்கொண்டு செல்லவேண்டும் என்று சொல்லிருந்தேன். ஒரு ஊருக்கு சென்று அந்த ஊரில் யார் மிகவும் நல்லவராக இருக்கின்றார் என்று கேளுங்கள். அந்த ஊரில் யாராவது ஒருவரை அடையாளம் காட்டுவார்கள். அவரை நீங்கள் பார்த்தால் ஒன்றும் இல்லாத ஆண்டியாக இருப்பார்.

நல்லவன் என்றால் கண்டிப்பாக அந்த ஊரில் அவர் சம்பாதித்திருக்க மாட்டார். ஏன் இப்படி சொல்லுகிறேன் என்றால் நல்லவனுக்கு சம்பாதிக்க தெரியாது. அதனால் சம்பாதிக்கிறவன் அனைவரும் கெட்டவனாகவும் சொல்லவில்லை. நல்லவன் என்றால் அப்பாவியாக இருப்பார். அவரிடம் அனைத்தையும் பிடுங்கி எதற்க்கும் லாயக்கில்லை என்றவாறு ஒதுக்கி வைத்திருக்கும் இந்த சமூகம்.

நான் சொல்லவந்த விசயம் கிரகங்களில் பாதி நல்லது செய்தால் பாதி கெடுதல் செய்யும். ஒன்று நேர்மையான வாழ்க்கைக்கு உத்திரவாதம் கொடுத்தால் ஒன்று மறைமுகமான வாழ்க்கைக்கு ஆதரவு கொடுத்து கொண்டு இருக்கும். மனிதன் என்றால் இரண்டு பக்கமும் சேர்ந்த ஒன்றாகவே இருக்கின்றான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மறைமுகமான ஒரு முகம் இருக்கின்றது அல்லவா. அந்த மறைமுகமான பக்கத்திற்க்கு கெடுதல் கிரகங்கள் தங்களின் பங்களிப்பை கொடுத்துக்கொண்டு இருக்கின்றன. எப்படி என்றால் அவர்களின் மறைமுகவாழ்க்கை எப்படி நடந்துக்கொண்டு இருக்கின்றது என்பதை துல்லியமாக செய்துக்கொண்டு இருக்கும். நேர்மறை மற்றும் எதிர்மறை இரண்டையும் சேர்ந்தவன் தான் மனிதன். இரண்டும் சமநிலையில் இருந்தால் நல்லது. ஏதாவது ஒன்று அதிகரித்தாலும் பிரச்சினை வந்துவிடுகின்றது. 

அமாவாசையைப்பற்றி சொல்லிருந்தோம். அமாவாசை அன்று கிரகங்களில் பலன் குறையும் சமயத்தில் தான் தீயசக்திகளின் ஆதிக்கம் மேலோங்கி வருகின்றது. அமாவாசை அன்று தீயசக்திகளிடம் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள தான் அம்மன் வழிபாடு எல்லாம் செய்யப்படுகின்றது.

மனிதன் இரண்டையும் சரி செய்துக்கொண்டு செல்லவேண்டும் என்பதற்க்காக தான் அமாவாசை அன்று பூசணிக்காய் உடைப்பது மற்றும் இதரபூஜைகளை எல்லாம் செய்வது எல்லாம் தீயசக்திகளுக்கு ஒரு உணவை கொடுக்கவேண்டும் என்பதற்க்காக கொடுத்திருக்கிறார்கள்.

பூசணியை நீங்கள் உடைத்தால் அது தீயசக்திகளுக்கு உணவாக கொடுக்கும் பழக்கம். இதனை ஜாதககதம்பத்தில் பழைய பதிவில் சொல்லிருப்பேன். முதலில் நீங்கள் தீயசக்திகளுக்கு ஒரு பூஜை போட்டபிறகு நல்ல சக்திகளுக்கு பூஜை செய்தால் அந்த பூஜையில் எந்தவித தீங்கும் உங்களுக்கு வராது. அதாவது நீங்கள் செய்யவேண்டிய பூஜை தடை இல்லாமல் செல்லும் என்று சொல்லிருக்கிறேன். பலர் இதில் பயன் அடைந்து வந்திருக்கின்றனர்.

ஒருவர் தங்களின் உடலில் நல்ல உணர்வோடு இருந்தால் அமாவாசை ஆரம்பிக்கும் நேரத்தை பஞ்சாங்கம் இல்லாமல் சொல்லிவிடுவார்கள். எப்படி என்றால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். அப்பொழுதே அமாவாசை வந்துவிட்டது என்று சொல்லிவிடலாம். இன்னும் சக்தி நிலையில் இருப்பவர்களுக்கு எல்லாம் இதனை மிக துல்லியமாகவே கணிக்கிட்டு சொல்லிவிடுவார்கள்.

அமாவாசை கெட்டநாள் என்பதைவிட அது நல்ல நாளாகவே நாம் எடுத்துக்கொள்ளலாம். நமக்கு ஒரு நல்ல வாய்ப்பை எல்லாம் வழங்ககூடிய ஒரு நாள் என்று சொல்லலாம். அமாவாசை கெட்டநாள் என்றால் நம்முடைய பித்ருக்கள் எல்லாம் கெட்டவர்களாக மாறிவிடுவார்கள்.

பித்ருக்களுக்கு செய்கின்ற காரியம் எல்லாம் அமாவாசை அன்று தானே நாம் செய்கிறோம். பித்ரு உலகத்தோடு நாம் தொடர்புக்கொள்வதற்க்கு ஒரு எளிமையான வழி என்பதை கண்டுபிடித்து அமாவாசை அன்று செய்து இருக்கின்றனர்.

அமாவாசை அன்று மட்டுமே பல ஆத்மாகளோடு தொடர்புக்கொள்ளமுடியும். அமாவாசை அல்லாத நாட்களில் பித்ருஉலகத்தில் உள்ள ஆத்மாவோடு தொடர்புக்கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. மிகுந்த சக்தி படைத்தவர்கள் மட்டுமே தொடர்புக்கொள்ளமுடியும்.

எளிமையான மக்களும் தொடர்புக்கொள்ள ஒரு நாளை தன்னுடைய ஞானத்தால் கண்டுபிடித்து வைத்திருக்கின்றனர் என்றால் நம்முடைய முன்னோர்களின் ஞானம் என்பது அப்பேர்பட்ட ஒன்று. அமாவாசைக்கு ஏன் இவ்வளவு முக்கியம் என்பதை இதன் வழியாகவே சொல்லுவதற்க்காக இதனைப்பற்றி சொன்னேன்.

பஞ்சாங்கம் சொல்லுவது எந்த நாள் கெடுதல் என்று இருக்கின்றதோ அந்த நாளில் கிரகங்களின் சக்தி மிக குறைவாகவே பூமிக்கு கிடைக்கின்றது அன்றைய  நாளில் நமக்கு தேவையான விசயத்தை நாம் செய்துவிடவேண்டும்.

இன்னமும் சொல்லபோனால் பஞ்சாங்கத்தில் சொன்ன கெட்ட நாள்கள் என்பதையும் விட இந்தியாவில் உள்ளவர்களுக்கு கிரகங்களின் சக்தி மிக மிக குறைவாகவே கிடைக்கின்றன என்பது நான் இங்கு சொன்னால் உங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது. பல வருடங்கள் ஆன்மீகத்தில் இருந்தவர்களுக்கு இது புரியவரும். இந்தியாவில் கிரகங்களின் சக்தி குறைவாகவே கிடைக்கின்றன என்பதை மட்டும் சொல்லிவிடுகிறேன்.

அமாவாசை என்று சொன்னீர்கள் அடுத்தது கெட்டநாள் என்றீர்கள் அதற்கு பிறகு எதுவும் கிடைக்கவில்லை என்று சொல்லுகின்றீர்கள் என்று உங்களின் மனது கணக்கு போடும். உங்களின் மனதிடமே இதனை விட்டுவிடுகிறேன். கிரகத்தின் சக்தியில் இருப்பவன் வெற்றியை எளிதில் பெற்றுவிடுவான். கிரகத்தின் சக்தி குறைவாக இருப்பவன் போராடி தோற்றுபோவான்.

கிரகத்தின் சக்தியை கிரகத்தின் சக்தி இல்லாத நாளில் என்ன செய்தால் கிரகத்தின் சக்தி கிடைக்கின்ற நாளில் அதனை பெறலாம் என்பதற்க்காக மேலே சொல்லிருக்கிறேன். இதனைப்பற்றி போட்டு குழப்பிக்கொள்ள தேவையில்லை.

ஜாதக கதம்பம் கட்டண பதிவுகளுக்கு தங்களை அன்போடு அழைக்கின்றேன். சோதிடம் என்பது எப்படி எல்லாம் தன்னுடைய வாழ்க்கையில் பயன்படுத்தலாம் அதனை ஆன்மீகவழியில் எப்படி கொண்டு செல்லலாம். என்ன செய்தால் எப்படி மாற்றம் வரும் என்பதை நிறைய விளக்கத்தோடு தெரிந்துக்கொள்ளலாம். உடனே என்னை தொடர்புக்கொண்டு இணைந்துக்கொள்ளுங்கள். 

ஜாதக கதம்பத்தின் கட்டண பதிவுகளுக்கு எத்தனை பேர் வருவார்கள் என்பதை கொண்டு அந்த தளம் எப்படி நடத்தலாம் என்பதை திட்டமிடலாம். கட்டணம் மிக மிக குறைவாகவே அது தீர்மானிக்கப்பட்டு இருக்கின்றது.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: