Followers

Thursday, March 15, 2018

வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்வது?


ணக்கம்!
          ஜாதகத்தை பல வருடங்களுக்கு முன்பு திருமணத்திற்க்கு தான் கையில் எடுக்க ஆரம்பித்தார்கள். இன்று அப்படி அல்ல ஒரு சின்ன பிரச்சினை வந்தாலே ஜாதகத்தை எடுத்து எதற்க்காக இந்த பிரச்சினை வந்தது என்று நோண்டி எடுக்கும் நிலையில் மக்கள் வாழ்க்கின்றனர்.

சோதிடர்களுக்கு தெரியாத விசயங்கள் கூட வரும் வாடிக்கையாளர்களுக்கு தெரிகிறது என்பது தான் உண்மையாக இருக்கின்றது. சோதிடத்தின் மீது அந்தளவுக்கு மக்கள் ஈடுபாடு வைத்துக்கொண்டுள்ளனர் என்று எடுத்துக்கொள்ளலாம்.

ஜாதகம் பார்க்கவேண்டும் என்பதைவிட உங்களின் மனதில் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழவேண்டும் என்பதை முதலில் தீர்மானித்துவிட்டு அதற்கு உங்களின் ஜாதகத்தில் இடம் இருக்கின்றதா என்பதை பாருங்கள். ஜாதகத்தில் வேறு விதமாக இருந்தால் அப்பொழுது உங்களின் ஆசை நிறைவேறாது.

உங்களின் ஆசைக்கு எப்படிப்பட்ட வழியில் பூஜைகள் மற்றும் பரிகாரங்கள் செய்தால் அது கிடைக்கும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து அதனை செய்துக்கொண்டு இருந்தால் கூடுமானவரை அதனை பெற்றுக்கொடுக்கும்.

எல்லாம் முடிந்தபிறகு சோதிடத்தை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யமுடியாது. பலர் வாழ்க்கை முழுமையாக முடிந்த பிறகு தான் சோதிடத்தை எடுத்து பார்க்க ஆரம்பிக்கின்றனர். அது தவறான ஒன்று என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும்.

நான் நிறைய கோவில்கள் எல்லாம் சென்று இருக்கிறேன். ஒரு குருவின் வழிகாட்டுதல் வந்த பிறகு தான் வாழ்க்கை மிக சரியாக தீர்மானித்து செல்லமுடிந்தது. ஒரு ஆன்மீககுருவின் டச் இல்லாமல் வாழ்க்கை கண்டிப்பாக நன்றாக இருக்காது என்பது என்னுடைய கருத்து.

குரு இல்லாமல் செய்யும் வழிபாடு பரிகாரங்கள் மற்றும் எது இருந்தாலும் அது உங்களை கரை சேர்க்காது என்பதை புரிந்துக்கொண்டு ஒரு ஆன்மீககுருவை நாடி அதன்படி வாழ்க்கை அமைத்துக்கொள்ளவேண்டும்.

சூழ்நிலையை உருவாக்குவது என்பது மிக மிக கடினம். ஏழ்மையாக இருந்துக்கொண்டு இருந்தால் அது ஒரு சூழ்நிலையில் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றீர்கள் என்று அர்த்தம். பணக்கார சூழ்நிலை என்பது வேறு. நீங்கள் இருக்கும் சூழ்நிலையில் இருந்து வேறு ஒரு சூழ்நிலைக்கு நீங்கள் மாறவேண்டும் என்றால் நிறைய கஷ்டப்படவேண்டும்.

சூழ்நிலையை உருவாக்கமுடியாது என்றால் அந்த சூழ்நிலையிலேயே வாழகற்றுக்கொள்ளுங்கள். சூழ்நிலையை உருவாக்கவேண்டும் என்றால் அதற்கு குரு கண்டிப்பாக தேவை என்பதை புரிந்துக்கொண்டு செயல்படுங்கள். 

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: