Followers

Friday, March 16, 2018

ஜாதக அனுபவம்


வணக்கம்!
         ஒவ்வொருவருக்கும் ஜாதகம் பார்க்கும்பொழுது அவர்களின் ஜாதகத்தில் தோஷம் இருந்தால் அதனால் அவர்களுக்கு பிரச்சினை வரும் என்று தெரிந்தால் மட்டுமே அவர்களுக்கு வழிபாட்டு முறைகளை பின்பற்ற சொல்லுவது உண்டு. நல்ல இருக்கும் ஜாதகத்தில் எதுவும் தேவையில்லை என்று சொல்லுவது உண்டு.

பல ஜாதகர்கள் ஜாதகத்தின் பலனை சொல்லியவுடன் எனக்கு பரிகாரம் சொல்லுங்கள் அதனை செய்கிறேன் என்பார்கள். அவர்களுக்கு எதுவும் தேவையில்லை எனும்பொழுது அவர்களே விருப்பட்டு பரிகாரம் கேட்பார்கள். எதுவும் தேவையில்லை என்று சொல்லுவேன். எந்த வழிபாட்டை மேற்க்கொள்ளலாம் என்று கேட்பார்கள். அதற்கும் எதுவும் தேவையில்லை என்று சொல்லுவது உண்டு.

ஒருவரின் ஜாதகத்தில் கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தால் அவர்களுக்கு எதுவும் தேவையில்லை. அந்த கிரகங்கள் அவர்களுக்கு தேவைப்பபடும் அனைத்தையும் கொடுத்துவிடும். அவர்கள் வழிபாடு செய்து பெறதேவையில்லை அனைத்தையும் கொடுத்துவிடுகிறது. 

ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் அதிகம் பாதிப்படையும்பொழுது மட்டுமே ஒருவருக்கு பிரச்சினை வருகின்றது. அவர்கள் தான் வழிபாடு கோவில் குளம் மற்றும் பரிகாரம் என்று சுற்றிக்கொண்டு இருக்கவேண்டும்.

ஒரு குடும்பத்தில் ஒருவரின் ஜாதகம் மட்டும் கொஞ்சம் நன்றாக இருந்தால் போதும் அனைவருக்கும் அந்த ஜாதகரின் பலனை வைத்து நன்றாக வாழ்ந்துவிடலாம். ஒட்டுமொத்த குடும்பஉறுப்பினர்களின் ஜாதகமும் கெடும்பாெழுது தான் பிரச்சினை அதிகமாக வந்துவிடுகிறது.

ஒரு ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் அதிகப்பட்சம் இரண்டு அல்லது மூன்று கிரகங்கள் ஆட்சி பரிவர்த்தணை பெற்று இருந்தால் போதும் நல்ல பலனை கொடுக்கும். ஒரு சில விதிகளும் இருக்கின்றன அதனை எல்லாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

நவஅம்மன்(சண்டி) யாகத்திற்க்கு அனுப்புவர்கள் உடனே அனுப்பிவைக்கவும். ஒவ்வொருவரையும் நாளை முதல் தொடர்புக்கொள்கிறேன்.  

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: