Followers

Thursday, March 8, 2018

ஜாதக அனுபவம்


வணக்கம்!
          ஒரு சில இடத்தில் நான் கிரகத்தோடு கடவுள் வலிமைமிக்கவர் என்று சொல்லிருக்கிறேன். ஒரு சில நேரத்தில் நான் மனதில் கடவுளைவிட கிரகங்கள் வலிமையாக இருக்கின்றன என்று எண்ணிக்கொள்வேன்.

நாம் கடவுளை வணங்கினாலும் எப்படியாவது ஒரு வழியில் கிரகங்கள் தன்னுடைய பலத்தை காட்டிவிடுகின்றது என்பது உண்மை தான் அப்புறம் எதற்க்கு பூஜை வழிபாடுகளை எல்லாம் செய்ய சொல்லுகின்றீர்கள் என்று கேட்கலாம்.

எந்த வழிபாடும் பூஜையும் பலனை கொடுக்காமல் இருக்காது அதனை நாம் மனபூர்வமாக செய்யவேண்டும் மற்றும் தொடர்ச்சியாக செய்யவேண்டும் இப்படி செய்தால் கிரகங்களை மீறி வேலை செய்துவிடமுடியும்.

பொதுவாக மனிதனின் செயல்பாடு அனைத்தும் மந்தமாக ஒரு முழுமையான அர்பணிப்போடு செய்வதில்லை ஏனோ செய்கிறோம் என்கிற மாதிரியே செய்கின்றனர். இதனை தவிர்த்துவிட்டு முழுமையான மனதோடு செய்தால் கண்டிப்பாக அனைத்தும் நல்ல பலனை தரும்.


ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் எந்த நட்சத்திரத்தில் செல்கின்றதோ அந்த நட்சத்திரம் தான் மிக முக்கியமாக கருதப்படவேண்டும். நட்சத்திரங்களின் பலனை வாங்கி தான் கிரகங்கள் பலனை கொடுக்கின்றது என்பது ஆழ்ந்து உற்று நோக்கும்பொழுது நமக்கு தெரியவரும்.

ஒரு கிரகம் எந்த நட்சத்திரத்தில் செல்கின்றது அந்த கிரகத்திற்க்கும் சம்பந்தப்பட்ட நட்சத்திரத்திற்க்கும் பகையா என்பதை அறிய வேண்டும். ஒரு கிரகத்தை பலப்படுத்த வேண்டும் என்றாலும் சம்பந்தபட்ட நட்சத்திரத்தின் அதிபதியை பூஜித்தால் கிரகம் பலனை கொடுக்கும்.

மிகச்சரியாக அந்த நட்சத்திரத்தை நாம் பூஜிக்கும்பொழுது அதில் செல்லும் கிரகத்தின் பலன் அதிகரிக்கும். அதன்வழியாக நாம் அந்த கிரகத்தினால் கிடைக்கும் முழுபலனையும் நாம் பெற்றுவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: