Followers

Wednesday, March 14, 2018

ஜாதக அனுபவம் :: வக்கிரகிரக சக்தி


வணக்கம்!
          பின்லேடனின் ஜாதகத்திலும் மூன்று கிரகங்கள் வக்கிரம் என்று கலைராஜன் ஐயா அவர்கள் சொல்லிருந்தார். உலகத்தில் உள்ள பெரிய ஜாம்பாவன் என்று சொல்லக்கூடியவர்கள் அனைவருக்கும் மூன்று கிரகங்கள் வக்கிரமாக இருக்கும்.

வக்கிரம் என்பது ஒரு சாதாரணமான மனிதன் சிந்தனை செய்வதைவிட இவர்கள் அதிகமாக சிந்தனை செய்யக்கூடியவர்கள். குறுக்குவழியை சிந்தனை செய்து அதனை செயல்படுத்தி வெற்றி காண்பவர்களாக இருப்பார்கள்.

கிரகங்கள் வக்கிரம் அடையாத நபர்கள் அதே சக்தியை பெறுவதற்க்கு உள்ள வழியை தான் நான் வக்கிரமாக இருக்கும் அம்மனை கும்பிட்டு அந்த சக்தியை பெறலாம் என்று சொல்லிருந்தேன். முதலில் நீங்கள் உங்களுக்கான வழியை தேர்ந்தெடுத்துக்கொண்டு இப்படிப்பட்ட அம்மனை வழிபட்டு வந்தால் கண்டிப்பாக வெற்றி பெறலாம்.

ஏதோ வாழ்ந்தால் போதும் என்று நினைப்பவர்கள் இப்படிப்பட்ட அம்மனை எல்லாம் கும்பிடவே வேண்டியதில்லை. அதிக சக்தியை நாம் பெற்று அதனை பயன்படுத்த வேண்டும் என்றால் இப்படிப்பட்ட அம்மனை வழிபட்டு வெற்றி பெறலாம்.

ஒரு சில ஜாதகர்களுக்கு வக்கிரம் பெற்றும் சும்மா இருப்பார்கள். ஏதும் செட் ஆகவில்லை என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள். இவர்களும் வக்கிரமாக இருக்கும் அம்மனை கும்பிட்ட பிறகு தான் அந்த கிரகத்தின் ஆற்றலை பெறமுடியும். 

எனக்கு வக்கிரமாக இருக்கின்றது ஒன்றும் நடக்கவில்லை என்றால் பலதடவை சென்று வக்கிரமாக இருக்கும் அம்மனை கும்பிட்டால் கண்டிப்பாக நன்றாக இருக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: