Followers

Wednesday, March 28, 2018

நவ அம்மன் பொது யாகம் நிறைவு


வணக்கம்!
         இன்றோடு நவஅம்மன் பொது யாகம் முடிவடைந்துவிட்டது. நவஅம்மன் பொது யாகம் சிறந்த முறையில் செய்து இருக்கிறேன். உங்களின் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். சிறந்த முறையில் செய்து இருக்கிறேன் என்பது உங்களுக்கு அனுப்பிய புகைப்படங்களை பார்த்தே தெரிந்துக்கொள்ளமுடியும்.

நவஅம்மன் பொது யாகம் முடிவடைந்தது ஒரு திருவிழா முடிந்தது போலவே எனக்குள் இருந்தது. அம்மனின் வெளிப்பாடு அந்தளவுக்கு ஒரு சக்தியை வாரி வழங்கியது என்றே சொல்லலாம். சிறந்த முறையில் அதன் சக்தி உங்களுக்கு கிடைக்கும்.

நவஅம்மன் யாகத்தில் கலந்துக்கொண்டவர்கள் தங்களின் வேலையை துரிதப்படுத்துங்கள். உங்களின் செயல்பாட்டை பொறுத்து உங்களுக்கு அம்மன் நல்லதை கொடுக்கும். அனைத்தையும் விரைவில் கொடுக்கும் என்று நம்புங்கள். அம்மன் அருளால் சாத்தியப்படும்.

ஒரு சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் நவஅம்மன் பொதுயாகம் நடத்தலாம். தற்பொழுது எந்த வித பொது பரிகாரம் மற்றும் யாகம் கிடையாது. மாதம் தோறும் நடக்கும் அம்மன் பூஜை மட்டும் நடைபெறும். தனிநபர்களுக்கு நடைபெறும் பூஜைகள் மற்றும் யாகம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கும்.

ஜாதகத்தை அனுப்பி தங்களின் பிரச்சினைக்கு தீர்வு காண விளையும் நண்பர்கள் தங்களின் ஜாதகத்தை அனுப்பலாம். பலர் நவ அம்மன் பொதுயாகம் முடிவடைந்தவுடன் சொல்லுங்கள் ஜாதகத்தை அனுப்புகிறேன் என்று சொன்னார்கள் அனுப்பி வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: