Followers

Saturday, March 31, 2018

ஏழரைச்சனி


ணக்கம்!          
                    ஏழரைசனி காலக்கட்டங்களில் ஒருவர் தன்னுடைய உடலுக்கு என்று மருத்துவசெலவை செய்யவேண்டிய கட்டாயத்தை உருவாக்கிவிடும். ஒருவர்க்கு சனியின் இரண்டாவது சுற்று சுற்றும்பொழுது இது கொஞ்சம் அதிகமாகவே செலவை வைத்துவிடுகின்றது.

பலரின் வாழ்க்கையில் உற்று நோக்கும்பொழுது இது கண்டிப்பாக நடந்தே தீரும் என்பது மட்டும் தெரிகிறது. ஏழரைசனியின் காலத்தில்  தொழில் செய்வது அல்லது ஒரு வேலையில் இருக்கும்பொழுது இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

ஏழரைச்சனியின் காலக்கட்டத்தில் சனியின் பலன் குறைவதால் அது உடலுக்கு தேவையான சக்தியை கொடுப்பதில்லை அதனால் உடல் நோய்வாய்படுகின்றது. ஏழரைச்சனியின் காலக்கட்டத்தில் எந்த வேலையும் இல்லாமல் சும்மா இருந்தால் ஒரளவு நமக்கு சனியனின்  பலன் கிடைக்கும்.

இந்த காலக்கட்டத்தில் நாம் வேலை செய்யாமல் இருக்கமுடியாது என்பதால் கொஞ்சம் பாதிப்பும் அதிகமாகவே இருக்கின்றது. என்ன தினமும் மாத்திரை உட்க்கொண்டுவிட்டு வேலையை பார்ப்பது போல அமைந்துவிடும்.

ஒருவரின் சுயஜாதகத்தில் சனி அமர்ந்த நிலைக்கு தகுந்தவாறு தான் ஏழரைசனியின் காலத்திலும் இது பலனை தருகின்றது. அதற்கு தகுந்தமாதிரி பலனை கண்டுக்கொண்டு செயல்படுங்கள்.

ஜாதககதம்பத்தின் கட்டண சேவைக்கு தங்களை தயார்படுத்திக்கொண்டு அதில் இணைந்துவிடுங்கள். உங்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த பல பதிவுகள் தருவதற்க்கு தயார்படுத்திக்கொண்டு வருகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: