Followers

Saturday, March 10, 2018

ஜாதக அனுபவம் : வக்கிரம்


ணக்கம்!
          ஒரு ஜாதகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் வக்கிரம் பெற்று இருந்தால் அந்த கிரகம் சம்பந்தப்பட்ட ஜாதகர் அதிக வலிமையுடையவராக இருப்பார். அதிக வலிமை என்றால் பிறர் செய்வதை விட இவர்களின் செயல்பாடு அதிகமாக இருக்கும்.

ஒருத்தர் சம்பாதிப்பதை விட இவர்கள் பல மடங்கு சம்பாதித்துவிடுவார்கள். அதே நேரத்தில் ஆன்மீகத்தில் இருந்தாலும் இவர்களிடம் அதிகமான சக்திகள் இருக்கும். பெரிய ஆட்கள் எனறு சொல்லுபவர்களின் ஜாதகத்தில் எல்லாம் இப்படிப்பட்ட அமைப்பு இருக்கின்றது.

நீங்கள் சாதாரணமாக ஒரு சோதிடர்களிடம் சென்று உங்களின் ஜாதகத்தை காண்பித்தால் அவர்கள் எல்லாம் கிரகங்கள் வக்கிரம் பெற்று இருக்கின்றதா என்பதை எல்லாம் பார்க்காமல் உங்களுக்கு பலனை சொல்லிக்கொண்டு இருப்பார்கள். நன்றாக அலசி பார்க்கும்பொழுது தான் இதனை எல்லாம் கவனத்தில் கொண்டு பலனை சொல்லுவார்கள்.

வக்கிரம் இல்லாமல் இருக்கும் ஜாதகர்கள் கூட பிரபலமாக இருக்க முடியும். அது அவர்களின் ஜாதகத்தில் உள்ள பிற கிரகங்களின் வழியாக இருக்கும். ஒருவர்க்கு வக்கிரம் பெற்ற கிரகங்களின் பலன் கிடைக்க வேண்டும் என்றால் அவர்களால் அவர்களின் ஜாதகத்தில் உள்ள கிரகத்தை வைத்து செய்யமுடியும்.

வக்கிரம் என்றாலே சூப்பர் பவர். சாதாரணமானவர்கள் எந்தவித சோதிடர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் வக்கிரம் பெற்ற கிரகத்தின் சக்தி தேவை என்றால் வக்கிரமாக இருக்கும் அம்மன் கோவில் சென்று தொடர்ச்சியாக வணங்கி வந்தால் நடக்கும்.

வக்கிரமாக இருக்கும் அம்மன் என்றால் அந்த கோவில் கிரகணங்கள் காலத்தில் நடை சாத்தப்படமாட்டார்கள். பகல் முழுவதும் கதவு திறந்தே அந்த கோவில் இருக்கும். அதே நேரத்தில் இரவில் வணங்குவது போலவும் அந்த அம்மன் கோவில் இருக்கும். இப்படிப்பட்ட கோவில்களை வணங்கி வாருங்கள் நீங்களும் சூப்பர் பவர் மேனாக இருக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

2 comments:

554 said...

உங்களை தொடர்ப்பு கொள்வது எப்படி எனக்கு கடுமையான பித்ரு தோஷ தொல்லை இருக்குது ....ஒரு ஆத்மா என்னை பின் தொடர்ந்து வந்து தொல்லை செய்கின்றது

இதற்கு என்ன தீர்வு ....எப்படி இந்த ஆத்மா வை நீக்குவது

Kalairajan said...

அய்யா பின்லேடனுக்கு 3 கிரகங்களுக்கு மேல் வக்கிரம் என்று கேள்விப்பட்டுள்ளேன்