Followers

Wednesday, March 28, 2018

சிறப்பு பதிவு 3


ணக்கம்!
          நட்சத்திர கூட்டத்தில் முதல் நட்சத்திரமாக இருப்பது அஸ்வினி நட்சத்திரமாகும். அஸ்வினி நட்சத்திரம் கேதுவின் நட்சத்திரமாக இருக்கின்றது. கேதுவின் வழிபாட்டிற்க்கு பெரும்பாலும் நம்ம ஆட்கள் விநாயகரை முன்வைப்பார்கள். கேது தசா அல்லது கேதுவின் நட்சத்திரம் வருகின்றதா அதற்கு விநாயகர் வழிபாட்டை மேற்க்கொள்ளுங்கள் என்று சோதிடர்கள் அடித்துவிடுவார்கள்.

முதல் நட்சத்திரமாக கேதுவின் நட்சத்திரம் வருகின்றது. முதல் நட்சத்திரம் கேதுவின் நட்சத்திரம் நாம் எதனை செய்தாலும் விநாயகர் வழிபாட்டை மேற்க்கொண்டு தான் வழிபாட்டை ஆரம்பிப்போம். விநாயகர் வழிபாட்டை மேற்கொள்வதற்க்கு காரணமாக இருப்பது காரியம் தடை இல்லாமல் செல்வதற்க்கு வழிபாட்டை மேற்க்கொள்வோம்.

மனிதர்களுக்கு முக்கால்வாசி பேருக்கு மேல் திருமணத்திற்க்கு பிறகு தான் ஒரு படி மேலே செல்வார்கள். பலரை பார்த்தால் அப்படி தான் இருக்கும். வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் அனைத்திற்க்கும் காரணமாக இருப்பது ஆன்மீகத்தில் மூலாதாரம் என்ற சக்கரத்தை காட்டுவார்கள்.

மூலாதார சக்கரம் நன்றாக இருந்தால் அதாவது வேலை செய்தால் அவர்களுக்கு தடைகள் அதிகம் ஏற்படாது. ஆன்மீகத்தில் நீங்கள் முதலில் இந்த சக்கரத்தை தான் இயக்க வைப்பார்கள். நாம் விநாயகர் வழிபாட்டை மேற்க்கொண்டு இதனை இயக்க வைப்போம். திருமணத்திற்க்கு பிறகு இது பலருக்கு அதுவாகவே வேலை செய்ய ஆரம்பிக்கும்.  பலரின் வாழ்க்கை திருமணத்திற்க்கு பிறகு நன்றாக இருப்பதற்க்கும் இது தான் காரணமாக இருக்கும்.

கேது தடைகளை ஏற்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இயற்கையாகவே மூலாதாரம் நன்றாக வேலை செய்தால் அவர்கள் நல்ல முறையில் வளர்ச்சி அடைந்துவிடுவார்கள். வேலை செய்யவில்லை என்றால் அவர்கள் வாழ்க்கை மிகுந்த போராட்டமாக இருக்கும். ஒரு சிலருக்கு திருமண வாழ்க்கை நன்றாக அமையாதற்க்கு காரணமாக இருப்பதும் இந்த நட்சத்திரத்தில் தான் நடக்கிறது.

பொதுவாக சொல்லுகிறேன் அனைத்து மனிதர்களுக்கும் மூலாதாரம் நன்றாக வேலை செய்தால் மட்டுமே அந்த மனிதன் நல்ல வளர்ச்சியை நோக்கி செல்வான். மூலாதாரம் தடைப்பட்டால் அவனால் வளர்ச்சியை நோக்கி செல்லவே முடியாது.

பெரும்பாலும் இந்த சக்கரம் வேலை செய்ய விநாயகர் வழிபாட்டை மேற்க்கொண்டாலும் ஒரு சிலர் யோகா தியானம் போன்றவற்றை செய்து இதனை திறப்பார்கள். பலருக்கு இயற்கையிலேயே இந்த சக்கரம் திறந்து இருந்தாலும் அவர்களுக்கு சக்கரத்தில் இருந்து சக்தி வெளியே வராது. அதாவது மூலாதாரத்தில் சக்தி இல்லாமல் இருக்கும்.

யோகா மற்றும் தியானம் செய்தும் மூலாதாரம் வேலை செய்யவில்லை என்றால் நீங்கள் இதற்கு தெரபி எடுக்கவேண்டும். நல்ல தெரபியை கொடுத்து இதனை வேலை செய்ய வைக்கவேண்டும். 

ஒரு சில இடத்தில் இதற்கு தெரபி கொடுத்து வேலை செய்ய வைப்பார்கள். இவர்களிடம் இதற்கு நீங்கள் காசு கொடுத்து தான் இதனை சரி செய்யவேண்டும். இதனை சரிசெய்துவிட்டால் உங்களுக்கு ஏற்படும் அனைத்து தடைகளும் நீங்கிவிடும்.

நெட்டில் நீங்கள் தேடினால் கூட இந்த சக்கரத்தை இயக்க வழி சொல்லுவார்கள். அதனை முயன்று பாருங்கள். பணம் கொடுத்து இதனை செய்யமுடியவில்லை என்றால் விநாயகர் வழிபாட்டை தொடர்ந்து மேற்க்கொண்டு வாருங்கள்.

பெரும்பாலான வணிகர்கள் அந்த காலத்தில் செட்டியார்களாக இருந்து இருக்கின்றனர். செட்டியார்கள் அதிகம் விரும்பும் கடவுளாகவே விநாயகர் இருந்தர்க்கும் காரணமாக மூலாதாரத்தை சுத்தம் செய்து பணவசதியை பெருக்கி கொடுப்பார் என்ற காரணத்தால் அவர்கள் விநாயகர் வழிபாட்டை மேற்க்கொண்டுள்ளனர்.

இன்றைய காலத்தில் பலர் விநாயகர் வழிபாட்டை மேற்க்கொண்டு வருகின்றனர். கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மட்டும் அல்லாமல் அனைத்து நட்சத்திரகாரர்களும் இந்த வழிபாட்டை மேற்க்கொள்வது நல்லது. அனைவரும் கண்டிப்பாக மேற்க்கொள்ளுங்கள்.

சோதிடம் சொல்லுவது அஸ்வினி தலையையும் மூளை பாகத்தையும் வேலை செய்ய வைப்பது என்று சோதிட சாஸ்திரத்தில் சொல்லிருக்கின்றனர். ஒருத்தருக்கு மூளையும் தலையும் நன்றாக இருந்தால் தான் அவர்கள் நல்ல வரமுடியும் என்றாலும் இதனை ஒழுங்காக வேலை செய்ய வைப்பது மூலாதாரத்தின் வேலையாக இருக்கும்.

மனிதர்கள் பிறந்தால் அனைவரும் வெற்றியை பெற்றுவிடுவதில்லை. நம்மிடம் இல்லாத ஒன்றை நாம் பெறுவதற்க்கு உள்ள வழிகளைப்பற்றி தான் இந்த பதிவுகளில் சொல்லிவருகிறேன். நம்மிடம் இல்லாதவற்றை எந்த வழியில் முயற்சித்தால் அது நமக்கு கிடைக்கும் என்பதற்க்கு ஒரு சில கருத்துக்களை மட்டும் உங்களிடம் முன்வைத்திருக்கிறேன்.

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்ற பழமாெழி இருக்கின்றது. நம்மிடம் இல்லாதவற்றையும் பெறுவதற்க்கு என்ன வழி என்று கொஞ்சம் சிந்தனை செய்து அதனை பெற்றுவிடவேண்டும். கண்டிப்பாக இது எளிதான காரியம் தான் முயற்சி செய்யவேண்டும். 

அஸ்வினி நட்சத்திரத்தைப்பற்றி பழைய பதிவில் சொல்லிருக்கிறேன். கூடுதலாகவும் இந்த தளத்தில் பல விசயங்களைப்பற்றி ஆராய்ந்து அதனை தெளிப்படுத்த இருக்கிறோம்.  அதனை எல்லாம் நீங்கள் பின்பற்றி வாருங்கள்.

நட்சத்திரத்திற்க்கு ஏன் இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்றால் அனைத்து கிரகங்களும் நட்சத்திரத்தில் தான் பயணம் செய்துக்கொண்டு இருக்கின்றன. நட்சத்திரத்தை சரி செய்தாலே போதும் கிரகங்களிடம் இருந்து நல்லபலனை எதிர்பார்க்கலாம்.

ஒரு நட்சத்திரம் நல்ல நட்சத்திரம் என்று நமக்கு தெரியவந்தால் அந்த நட்சத்திரத்தின் அதிதேவதையின் உபசாகராக நாம் இருந்தால் கூட அந்த நட்சத்திரத்தின் முழுபலனையும் நாம் பெற்றுவிடமுடியும். அனைத்தும் நாம் செய்யும் திட்டமிடலில் தான் இருக்கின்றது.

ஜாதக கதம்பத்தின் கட்டண சேவைக்கு பலர் என்னை தொடர்புக்கொண்டு கேட்டு வருகின்றனர். அவர்களிடம் அதனைப்பற்றி சொல்லிவருகிறேன். நம்முடைய அனைத்து நண்பர்களும் இதனை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். 

கட்டண சேவையில் ஒன்றை என்னுடைய விருப்பத்திற்க்காக செய்துக்கொடுக்கிறேன். அதாவது ஏதாவது ஒரு பூஜையை நீங்கள் செய்துக்கொள்ளலாம் என்பதையும் சொல்லிவிடுகிறேன். உடனே தொடர்புக்கொள்ள அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: