Followers

Friday, March 23, 2018

ஜாதக அனுபவம்


வணக்கம்!
          ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் சக்தியை மட்டும் அதிகமாக வெளிக்கொண்டு வந்தால் அதனால் தீமை வராதா என்று ஒரு கேள்வி வந்திருந்தது. கண்டிப்பாக வரும் அதற்கு தான் நமக்கு வழிகாட்ட ஒரு குரு ஒருவர் வேண்டும் என்று சொல்லுவது உண்டு.

ஒரு ஜாதகத்தில் சனிக்கிரகம் ஒரு வீட்டிற்க்கு அதிபதியாக இருப்பார். அதே சனிக்கிரகம் ஒரு இடத்தில் அமர்ந்து இருப்பார். உதாரணமாக ஒன்றைச்சொல்லுவோம். சனிக்கிரகம் இரண்டாவது வீட்டிற்க்கும் மூன்றாவது வீட்டிற்க்கும் அதிபதியாக இருக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம். அவர் நான்காவது வீட்டிற்க்கு சென்று அமர்ந்திருந்தால். தற்பொழுது மூன்று வீட்டிற்க்கு பொறுப்பாக இருக்கிறார்.

மூன்று வீட்டின் பலனை கொடுப்பாரா அல்லது நாம் எதிர்பார்க்கும் பலனை கொடுப்பாரா என்று கேட்டால் அதற்கு தான் நாம் அந்த விசயத்தை ஆரம்பிக்கும் முன் நமது குருவின் முழுஆசியும் பெற்று அதன்பிறகு ஆரம்பிக்கவேண்டும்.

நாம் கேட்கின்ற பலனை கொடுக்ககூடிய ஆற்றலை நமது குரு தான் பார்த்து செய்யவேண்டும். குருவின் அருளோடு நாம் செய்யும் காரியம் நமக்கு தேவையான பலனை கொடுத்துவிடுகிறது. இரண்டாவது வீட்டின் வழியாக நமக்கு பணப்புழக்கம் அதிகமாக வரவேண்டும் என்று வைத்துக்கொண்டால் குருவின் அருளால் நமக்கு அது சாத்தியப்படும்.

ஒரு கிரகம் ஐம்பது சதவீதம் நன்மையும் ஐம்பது சதவீதம் தீமையும் தரும். நாம் நன்மையை தான் தரும் என்று நினைத்துக்கொண்டு அதன் சக்தியை உரு ஏற்றினால் அதனால் தீமையும் வரும். கண்டிப்பாக வரும் என்பது தான் உண்மை. அதற்கு நம்முடைய குருவின் அருள் இருந்தால் தீமை இல்லாமல் நன்மையை பெறலாம்.

நமக்கு தேவையானவற்றை நம்முடைய விடாமுயற்சியால் பெற முடியும். அதனால் தான் நான் சொன்னேன் எந்த கிரகத்தின் ஆற்றலையும் பெறலாம் ஆனால் அதனை குருவின் அருளோடு பெறுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: