Followers

Monday, March 5, 2018

ஜாதக அனுபவம்

ணக்கம்!
          லக்கினாதிபதி பனிரெண்டாவது வீட்டிற்க்கு செல்வது என்பது ஒரு சாபக்கேடு என்பது யாருக்கும் தெரியாமல் இல்லை. சனியை மட்டும் அதில் சொல்லிருந்தேன். பொதுவாக எந்த ஒரு லக்கினாதிபதியும் விரைய வீட்டிற்க்கு சென்றுவிடகூடாது.

முதலில் அவர்களின் வாழ்க்கையை அவர்களே அழித்துக்கொள்வதற்க்கு காரணமாக அமைவார்கள். லக்கினாதிபதி விரைய வீட்டிற்க்கு செல்லும்பொழுது அவர்கள் வெளியாட்கள் சொல்லுவதை கேட்கமாட்டார்கள்.

மனிதர்களை எடுத்துக்கொண்டாலே அனைவரும் பிறர் சொல்லுவதை கேட்கமாட்டோம் என்ன காரணம் என்றால் நமக்கு தான் அனைத்தும் தெரியும் என்ற ஒரு மனபோக்குடன் வாழ்வதால் தான் இப்படி இருக்கின்றது. நான் பிறரை சொல்லவில்லை என்னையே நான் அப்படியே தான் பாரக்கிறேன். அது தவறு என்பது காலக்போக்கில் தெரியவருகின்றது.

என்னுடைய வாழ்க்கையில் நான் பார்த்தவரை நான் செய்தது அனைத்தும் முக்கால்வாசி வீணான வேலையாக தான் இருக்கின்றது. கால்வாசி பிறர் சொல்லி என்னை திருத்திக்கொண்ட பிறகு அது நல்லதாக அமைகிறது.

லக்கினாதிபதி விரையவீட்டிற்க்கு செல்லும்பொழுது அவர்கள் பல மனதில் இருப்பார்கள். எந்த ஒரு முடிவையும் அவர்கள் எடுக்காமல் குடும்பத்தில் உள்ளவர்களை கஷ்டப்படுத்துவார்கள். இதனால் அவர்களும் கஷ்டப்பட்டு பிறரையும் கஷ்டத்தில் ஆழ்த்துவார்கள்.

குடும்பத்தில் உள்ள சொத்துகளை எல்லாம் வீணாக அழிப்பதற்க்கு காரணமாக இருப்பார்கள். சொத்துகளை அழிப்பது என்பது ஒரு பெரிய விசயம். ஒரு சொத்தை சம்பாதிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதனை சம்பாதித்தது ஒருத்தராக இருக்கும். அவர் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஒன்றுமே உதவாத காரியத்திற்க்கு உதவாகரையாக இவர்கள் அழித்துவிடுவார்கள்.

பெரும்பாலும் விரையவீட்டில் லக்கினாதிபதி இருப்பவர்களிடம் சொத்துகளை பணத்தையும் கொடுக்காமல் இருப்பது நல்லது ஒரே பிள்ளையாக இருந்தால் நிறைய கோவில்களுக்கு சென்று அதன்பிறகு சொத்துகளை கொடுக்கலாம்.

இன்று கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதியில் என்னை சந்திக்கலாம். சந்திக்க விருப்பம் இருப்பவர்கள் என்னை தொடர்புக்கொள்ளவும்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800  

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: