Followers

Saturday, March 17, 2018

கேள்வி & பதில்


வணக்கம்!
          நவஅம்மன் யாகத்திற்க்கு வேண்டுதல் அனுப்ப கடைசி நாள் வரும் திங்கள்கிழமையோடு முடிவடைகிறது. திங்கள்கிழமைக்கு பிறகு வரும் வேண்டுதலை ஏற்றுக்கொள்ளபடாது. 

ஒரு நண்பர் கேள்வி ஒன்றை அனுப்பியிருந்தார். வக்கிரசக்தி உடைய அம்மனை வணங்கிக்கொண்டு வரும்பொழுது பிற தெய்வங்களை வணங்கலாமா என்று கேள்வி அனுப்பியிருந்தார்.

பிற மதங்களில் இல்லாத ஒன்று நமது மதத்தில் இருக்கின்றது. நமக்கு என்ன தேவையோ அந்த தேவைக்கு என்று ஒரு தேவதையை உருவாக்கி அதனை மட்டும் வணங்கி வந்தால் உங்களுக்கு அந்த தேவதை உங்களுக்கு நீங்கள் கேட்டதை கொடுக்கும் என்று வைத்திருக்கிறார்கள்.

நீங்கள் எல்லாவற்றையும் வணங்கிக்கொண்டு இருக்க தேவையில்லை. ஒரே குழப்பமாக இருந்துக்கொண்டு வாழகூடாது முதலில் நீங்கள் உங்களின் வாழ்க்கைக்கு தேவையானது எது என்று தெரிந்துக்கொண்டு அதன்பிறகு வணங்கினால் நல்லது.

வக்கிரகிரக சக்தி உடைய அம்மனை வணங்க ஆரம்பித்துவிட்டால் அது மட்டுமே போதும். அதன்பிறகு அனைத்தும் அந்த அம்மனை உங்களை பார்த்துக்கொண்டு விடும்.  முதலில் நீங்கள் எந்த பாதையில் செல்லவேண்டும் என்பதை தெரிந்துக்கொண்டு அதன்பிறகு செயல்பட ஆரம்பியுங்கள்.  எல்லா பாதையிலும் பயணிக்கமுடியாது. பாதை எது என்பதை தீர்மானித்துவிட்டு அதன்பிறகு செயல்பட ஆரம்பியுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

KJ said...

Sir Vakra Graha Sakthi konda Amman yethu... Utharanam Solavum..nandri