Followers

Monday, March 26, 2018

ஜாதக அனுபவம் :: அடிப்பட்ட கிரகங்களின் தசா


வணக்கம்!
          ஒருவரின் ஜாதகத்தில் கிரகங்கள் சரியில்லை என்றால் அவர்கள் எடுக்கும் முடிவு எல்லாம் சரியாகவே இருக்காது. அவர்களின் போக்குக்கு அவர்கல் முடிவு எடுப்பார்கள். அதனால் அவர்களின் வாழ்க்கை நிலை இல்லாமலேயே இருக்கும்.

ஜாதகத்தில் ஏன் அப்படி கிரகங்கள் அமைகின்றன என்று கேட்கதோன்றும் என்ன செய்வது எல்லாம் நமது முன்ஜென்மத்தை காட்டவேண்டியதாகிவிடுகின்றது. கிரகங்கள் சரியில்லை என்றாலும் நாம் நடந்துக்கொள்ளும் வழியில் இதனை சமாளிக்கலாம். நமக்கு ஒரு நல்ல ஆலோசகரை வைத்துக்கொண்டு அதன் வழியாக நாம் சமாளிக்கலாம்.

பெரும்பாலம் ஒருவருக்கு வாழ்க்கை முழுவதுமே கஷ்டக்காலம் என்பது இருக்காது. அவ்வப்பொழுது வரும் கோச்சாரப்பலன் மற்றும் தசாநாதன் வழியாக நன்மையும் நடக்கும் அதுவும் அவர்களின் முன்ஜென்மத்தின் வழியாக தான் நன்மை நடக்கிறது என்று சொல்லலாம்.

ஒருவருக்கு குறைந்தபட்சம் நாற்பது வருடங்களுக்கு கஷ்டத்திலேயே அவர் வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருக்கின்றார் என்றால் கண்டிப்பாக அவரின் ஜாதகத்தை நன்கு அலசி ஆராய்ந்து அதற்கு என்ன வேண்டுமே அதனை செய்யவேண்டும்.

பெரும்பாலும் வாழ்க்கை சரியில்லாமல் அதிக காலம் சென்றால் அவர்களுக்கு நடக்கும் தசா சரியில்லை என்று தான் சொல்லவேண்டும். தசாநாதனால் அவர்களுக்கு ஒரு நல்ல பலனை கொடுக்கமுடியவில்லை. நன்றாக அடிப்பட்ட கிரகங்களின் தசா தொடர்ச்சியாக நடைபெறுகிறது என்று அர்த்தம்.

அடிப்பட்ட கிரகங்கள் ஜாதகத்தில் எப்படி செல்கின்றன. அதற்கு எப்படி பரிகாரம் செய்தால் ஜாதகரை காப்பாற்றமுடியும் என்பதை தெரிந்துக்கொண்டு அதற்க பரிகாரம் செய்யவேண்டும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: