Followers

Wednesday, July 11, 2018

பூர்வபுண்ணியம்


வணக்கம்!
         பூர்வபுண்ணிய வீடான ஐந்தாவது வீட்டில் தீயகிரகங்கள் நிற்ககூடாது. பூர்வபுண்ணிய வீடான ஐந்தாவது வீட்டில் தீயகிரகங்கள் நின்றால் அது நிறைய மனநிலையில் பாதிப்பை தருகின்றது. தீயகிரகங்கள் ஐந்தில் நின்றால் புத்தியை கொஞ்சம் குளறுபடி செய்யும்.

எப்படிப்பட்ட காலக்கட்டங்களில் இது செய்கின்றது என்றால் அமாவாசை மற்றும் பெளர்ணமி காலக்கட்டங்களில் இது அதிகமாக தாக்கும். இந்த காலக்கட்டங்களில் இவர்கள் கொஞ்சம் உஷாராக இருக்கவேண்டும்.

ஐந்தில் தீயகிரகங்கள் இருக்கும் நபர்கள் திருமண காலக்கட்டங்களில்    பல பிரச்சினைகளை சந்திக்கின்றனர். திருமண காலக்கட்டங்களில் இவர்களுக்கு பிரச்சினை காதல் வடிவில் வரும். காதல் வடிவில் என்றால் இவர்கள் காதல் செய்யாமல் இருந்தால் கூட காதல் என்று யாராவது வந்து திருமணத்தை குழப்புவார்கள்.

திருமணம் முடிந்த பிறகு அது குழந்தை பாக்கியத்திலும் கொஞ்சம் காலம் கடத்தும். எப்படியும் குழந்தை இருக்கும் அதற்காக கொஞ்சம் சிரத்தை எடுக்கவேண்டும். நிறைய பேருக்கு ஆண்குழந்தைகளுக்கு வாய்ப்பு இருக்கின்றது.

ஐந்தில் தீயகிரகங்கள் இருக்கும் நபர்களுக்கு சொத்து தகராறுகள் அதிகமாக ஏற்படுகின்றது. கஷ்டப்பட்டு சம்பாதித்து சொத்து சேர்த்தாலும் அதிலும் சொத்து தகராறு ஏற்படுகின்றது. குலதெய்வத்தையும் மற்றும் இஷ்டதெய்வத்தை வணங்கிவரும்பொழுது இந்த பிரச்சினை தீரும்.

ஆடிமாத பூஜைகளுக்கான புக்கிங் நடந்துக்கொண்டு இருக்கின்றது. உடனே புக்கிங் செய்துக்கொள்ள அன்போடு வேண்டுகிறேன்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: