Followers

Tuesday, July 3, 2018

செவ்வாய் கிரகம் தரும் பெரிய இடம்


வணக்கம்!
          ஒருவர்க்கு செவ்வாய் பத்தாவது வீட்டில் மற்றும் பதினாேராவது வீட்டில் இருந்தால் அவர்கள் பெரியளவில் வருவார்கள் என்று பழைய பதிவில் சொல்லிருக்கிறேன். இந்த செவ்வாய் ஒருவரை அந்த ஊரில் பெரிய தொழிற்சாலை மற்றும் ஆயிரக்கணக்கான பேர்கள் வேலை செய்யும் இடத்தில் தலைவர்கள் அல்லது அவரே அந்த கம்பெனி நடத்துபவர்களாக இருப்பார்கள் என்று சொல்லிருக்கிறேன்.

செவ்வாய் அமைப்பு இல்லை என்று சொல்லுபவர்கள் செவ்வாய் கிரகத்தின் காரத்துவம் உடைய முருகனை வணங்கி வாருங்கள் என்று சொல்லிருக்கிறேன். இதனை சொல்லியவுடன் ஒரு முறை மட்டும் முருகனை சென்று வணங்கிவிட்டு ஒன்றும் நடக்கவில்லை என்று இருப்பவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர்.

முருகனின் அடிமை போல மாறுபவர்களுக்கு தான் நடக்கும் ஒரு முறை மட்டும் சென்று வணங்கிவிட்டு வருபவர்களுக்கு எல்லாம் எளிதில் அமைந்துவிடாது. பல தடவை சென்று வரவேண்டும் அப்பொழுது தான் நடக்கும்.

முருகனின் அடிமைபோல இருந்தால் ஒரளவுக்கு அந்த நிலையை விரைவில் அடைந்துவிடலாம் அதே நேரத்தில் அதற்குண்டான வேலைகளையும் நீங்கள் பார்த்துக்கொண்டே வரவேண்டும். உங்களின் செயல்பாடு மற்றும் முருகனை அதிகம் விரும்பும்பொழுது கண்டிப்பாக அந்தநிலைக்கு வரலாம்.

ஒரு முறை சென்று வணங்கிவிட்டு வந்தால் நடந்துவிடாது. உங்களால் முடிந்தால் மாதந்தோறும் பிரதிசித்தி பெற்ற முருகன் கோவில் சென்று வரவேண்டும். அனுபவத்தில் என்னுடைய நண்பர்களுக்கு எல்லாம் இது நடந்து இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: