Followers

Tuesday, July 17, 2018

ஆடி மாத சோதிட ஆலோசனை


வணக்கம்!
          ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதம் என்பதால் இந்த மாதம் முழுவதும் அம்மனுக்குரிய வழிபாடுகளை தொடர்ந்து செய்து வாருங்கள். உங்களுக்கு நேரம் கிடைக்கும்பொழுது எல்லாம் உங்களுக்கு அருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.

ஆடி மாதத்தில் அம்மன் வழிபடும்பொழுது நமது கர்மவினை கழிந்து அதனால் நல்ல மாற்றத்தை நம் வாழ்க்கையில் உருவாக்கிக்கொள்ள முடியும். தினந்தோறும் உங்களின் பூஜையில் நமது அம்மனை நினைவில் வைத்துக்கொண்டு பூஜை செய்யுங்கள்.

ஆடிமாதம் ஆண்டு தோறும் உங்களிடம் ஆண்டு சந்தா போல அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தசொல்லுவேன். இது ஆண்டுதோறும் அறிவிப்பை தெரிவித்தவுடன் அனைவரும் எனக்கு அனுப்பி வந்து இருக்கின்றீர்கள். தொடர்ந்து இந்த வருடமும் அனுப்பி வையுங்கள்.

நேற்று மாலை அம்மனுக்காக பூஜை செய்யும்பொழுது இந்த எண்ணம் வந்தது. இந்த மாதம் முழுவதும் இலவச சோதிட ஆலோசனையை வழங்கவேண்டும் என்று வந்தது. அம்மன் எனக்கு இட்ட கட்டளை இது இதனை ஏற்று இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு இலவச சோதிட சேவை செய்ய இருக்கிறேன்.

உங்களின் ஜாதகத்தை அனுப்பிவிட்டு என்னை தொடர்புக்கொண்டு கேட்டுக்கொள்ளலாம். நீங்கள் செய்யவேண்டிய பரிகாரமும் பரிந்துரை செய்கிறேன். அனைவரும் தொடர்புக்கொண்டு  தெரிந்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: