Followers

Saturday, July 21, 2018

சோதிட ஆலோசனை


வணக்கம்!
         முன்கூட்டியே திட்டமிட்டு நல்ல வாழ்க்கையை வாழவேண்டும் என்பதற்க்காக தான் சோதிட அறிவியல் பயன்படுகின்றது. நமது திட்டமிடல் நன்றாக இருக்கவேண்டும் அதோடு நாம் செல்லும் வழியும் நன்றாக இருக்கின்றதா என்பதை பார்த்து அதற்கு தகுந்தார் போல் நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும்.

பெரும்பாலும் நமது வாழ்க்கையை நமக்கு வருகின்ற தசாநாதன் தான் அதிகப்பட்சம் தீர்மானிப்பார். தற்பொழுது நடைபெறுகின்ற தசா அதன்பிறகு வருகின்ற தசா என்ன என்பதை பார்த்துக்கொண்டு அதற்கு தகுந்தார் போல வாழ்க்கையை அமைப்பது நன்றாக இருக்கும்.

இராகு தசாவில் ஆன்மீகத்தை கொஞ்சம் காட்டினால் அதன்பிறகு வருகின்ற குருதசா அதிகமாகவே ஆன்மீகத்தை கொடுக்கவேண்டும். குருதசா ஆன்மீகத்தை கொடுக்கவில்லை என்றால் அப்பொழுது நாம் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்ற வாழ்க்கையில் தடம்மாறுவதற்க்கு சந்தர்ப்பம் அமைந்துவிடும்.

இராகு தசா ஆன்மீகத்தை கொடுத்து குரு தசாவும் ஆன்மீகத்தை கொடுத்தால் உங்களின் வாழ்க்கை சீராக சென்றுக்கொண்டு இருக்கும். குரு தசாவிற்க்கு பிறகு வருகின்ற சனி தசாவும் ஆன்மீகத்தை கொடுத்தால் அவர் ஒரு சிறந்த ஆன்மீகவாதியாக தன்வாழ்க்கையை வாழ்ந்து இருக்கின்றார் என்று அர்த்தம் கொள்ளலாம்.

ஒவ்வொரு தசாவும் ஒவ்வொரு மாதிரியான வாழ்க்கையை கொடுத்துக்கொண்டு இருந்தால் அவர் வாழ்க்கை வித்தியாசமாக இருக்கும் எதிலும் நிலை இல்லாத வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டு இருப்பார்.

நீங்கள் வாழ்க்கின்ற வாழ்க்கை மற்றும் எதிர்காலத்தில் நீங்கள் எப்படி வாழபோகின்றீர்கள் அதற்கு தசா பங்களிப்பை சரியாக செய்யுமா என்பதைப்பற்றி எல்லாம் உங்களின் ஜாதகத்தின் வழியாக தெரிந்துக்கொள்ளலாம்.

நீங்கள் செய்ய வேண்டியது தற்பொழுது ஜாதககதம்பத்தில் இலவச சோதிட ஆலோசனை மற்றும் அதற்கு பரிகாரமும் இலவசமாக வழங்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றது உடனே தொடர்புக்கொண்டு கேட்டுக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: