Followers

Monday, July 9, 2018

மறைந்த குருவின் பலன்


வணக்கம்!
          குரு கிரகம் மறைந்தால் எப்படிப்பட்ட பிரச்சினை வரும் என்று பழைய பதிவில் நிறைய சொல்லிருக்கிறேன். என்னுடைய நினைவில் அவ்வப்பொழுது வரும் எண்ணங்களை பகிர்ந்துக்கொள்ளவேண்டும் இன்று வந்த குருவைப்பற்றிய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

குரு கிரகம் மறைந்தால் ஒருவருக்கு கடன் தொல்லையும் அதிகரிக்கும். குரு கிரகம் தங்கத்திற்க்கு காரத்துவம் வகிப்பதால் தங்கத்தை அடகுகடையில் வைக்கவேண்டிய ஒரு சூழ்நிலையை உருவாக்கிவிடும். 

அடகு கடையில் தங்கத்தை திருப்பமுடியாமல் போன காரணத்தால் உங்களுக்கு உங்களின் துணையின் வழியாக பிரச்சினை வந்துவிடும். நீங்களும் அதனால் நிறைய மனக்கஷ்டத்திற்க்கு ஆளாகிவிடுவீர்கள்.

ஒரு மனிதனுக்கு ஒரு வேலை என்பது இருக்கவேண்டும். வேலை இல்லை என்றால் ஒரு தொழிலாவது இருந்து அவர்களை காப்பாற்றவேண்டும். இரண்டும் இல்லை என்றால் ஒருவரின் நிலைமை படுமோசமாக போய்விடும். ஒன்றும் இல்லாத ஒரு நிலையை மறைந்த குரு கிரகம் உருவாக்கிவிடும்.

மேலே சொன்ன இரண்டும் ஒருவருக்கு இல்லை என்றால் இந்த சமுதாயத்தில் அவர்களுக்கு எப்படிப்பட்ட மரியாதை கிடைக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள். இது மறைவுகுரு கிரகம் தரும் அதிகப்பட்ச தண்டனை என்றே சொல்லலாம்.

பெரும்பாலும் மறைந்த குரு காதல் தோல்விகளை உருவாக்கி மனக்கஷ்டத்தை உருவாக்கிவிடுகின்றது. காதல் தோல்விகளால் அவர்களின் மனநிலை பாதிப்பை உருவாக்கிவிடுகின்றது. ஒருவருக்கு தலைகுனிவை கூட ஏற்படுத்தி அவர்களின் மனக்கஷ்டத்தை எல்லாம் ஏற்படுத்திவிடும்.

மறைந்த குரு ஒருவருக்கு கையில் பணம் தங்காதா நிலையை உருவாக்கிவிடும். பணத்திற்க்கு அல்லல்படும் நிலையை உருவாக்குவதில் மறைந்த குருவிற்க்கு ஈடு இணை இல்லை என்று சொல்லலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: