Followers

Friday, July 27, 2018

எட்டில் குரு


வணக்கம்!
          நேற்று ஒரு நண்பரிடம் பேசிய தகவலை வைத்து இந்த பதிவை தருகிறேன். குரு கிரகம் எட்டில் நின்றால் அது பிரச்சினையை தருமா என்ற கோணத்தில் பார்த்தால் அது அவ்வளவு பிரச்சினையை கொடுப்பதில்லை என்று தோன்றுகிறது.

என்னிடம் உள்ள பல ஜூவல்லரி உரிமையாளர்களுக்கு குரு கிரகம் எட்டில் நிற்கின்றது. எட்டில் இருக்கும் குரு அவர்களுக்கு நல்ல செல்வவளத்தை கொடுக்கின்றது. செல்வவளம் மட்டும் அல்லாமல் அவர்களுக்கு எல்லா தொழிலிலும் வெற்றியை கொடுத்து நல்ல வாழ்க்கையை வாழ்கின்றனர்.

ஒரு சில நண்பர்கள் குரு கிரகம் எட்டில் நிற்பதால் ஆன்மீகத்தில் கூட நல்ல நிலையில் இருக்கின்றனர். குரு மறைவுக்கு போனாதல் அவர்களுக்கு மறைவுபொருள்கள் ஆராய்ச்சி செய்து ஆன்மீகத்தில் இருக்கின்றனர்.

மறைவுஸ்தானம் குரு செல்லக்கூடாது என்று சொல்லிருக்கிறேன். அதே நேரத்தில் எட்டில் உள்ள குரு பலருக்கு பொன்னான வாய்ப்பை கொடுத்து இருக்கின்றது என்பது மட்டும் உண்மை என்று நான் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்.


பல நண்பர்கள் ஆன்மீகத்தில் ஈடுபட்டு ஆர்வகோளாறு காரணமாக அனைத்து சாேதிடபதிவுகளையும் படித்துவிடுகின்றனர். அதனை அப்படியே அவர் அவர்களின் வாழ்க்கையில் ஒப்பிட்டுவிடுகின்றனர். அது எப்படிப்பட்ட விளைவை தருகின்றது என்றால் எனக்கு இப்படி இருக்கின்றது அதனால எனது வாழ்க்கையில் இப்படி நடந்துவிடுமோ என்று அதனை எண்ணியே இருக்கின்றனர்.

பலர் திருமணத்தில் பல சந்தேக கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கின்றனர். திருமணத்தை செய்யாமல் இருக்கின்றனர். உண்மையில் வாழ்க்கையில் அப்படி எல்லாம் இருப்பதில்லை. இதற்கு காரணமாக இருப்பது ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதத்தில் இறைவன் படைத்து இருக்கின்றார். சோதிடவிதிகள் எல்லாம் நடந்துவிடுவதில்லை என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். இறைவனை நம்பி அனைத்து காரியத்திலும் இறங்கிவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: