Followers

Friday, July 6, 2018

மனநிலை தரும் கிரகபாதிப்பு


வணக்கம்!
          ஒரு மனிதனுக்கு கிரகங்கள் கொடுக்கும் தண்டனை என்பதை விட மனிதனே உருவாக்கிக்கொள்ளும் பிரச்சினைகள் தான் அதிகமாக இருக்கின்றது. ஒருவரின் மனதில் உருவாகும் கெட்ட மனநிலை அவர்களை தாக்கிவிடுகின்றது.

இந்த காலத்தில் மனிதன் அதிகமாக கெட்டதற்க்கு துணை போகும் மனநிலையை உருவாக்குகிறான். ஒரு இடத்தில் ஒரு தவறு நடக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் அந்த தவறுக்கு அவனின் மனநிலை துணைபோகும். இது பாதிக்கப்பட்டவர்களிடம் வரும் பாவம் அநியாத்திற்க்கு துணைபோன மனநிலையால் வருகின்றது.

கிரகங்கள் எல்லாம் அந்தளவுக்கு பிரச்சினையை கொடுப்பதில்லை. பிரச்சினை என்பது அவர் அவர்களின் மனநிலையில் உருவாகும் தவறான மனநிலையில் இருந்து வருகின்றது. இது பெரிய அளவில் உருவாகி பிரச்சினையில் மாட்டிக்கொள்கின்றனர்.

கிரகங்களால் வருவது முன்ஜென்மத்தில் உள்ள கர்மவினையால் குறைவாக தான் மனிதனுக்கு வருகின்றது. அது தாக்குவதும் மிக குறைந்த அளவில் தாக்கும். அது அவ்வளவு பெரிய நிலையில் தாக்குவதற்க்கு காரணமாக அமைவது இந்த ஜென்மத்தில் மனநிலையில் தேக்கி வைக்கு அநியாயம் எண்ணங்கள் தானே தவிர வேறு எதுவும் இல்லை.

மனதை கொஞ்சம் சுத்தப்படுத்தி அநியாயத்திற்க்கு துணை போகும் எண்ணங்களை எல்லாம் தவிர்த்தாலே ஒருவருக்கு பிரச்சினை என்பது வரவே வராது. நல்ல சந்தோஷத்தோடு வாழ்க்கை செல்லும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: