Followers

Wednesday, July 4, 2018

கர்மா


வணக்கம்!
          உங்களின் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் பத்து குடும்பத்தின் ஜாதகத்தை வாங்கிக்கொண்டு அவர்களின் நட்சத்திரத்தை வைத்து ஒரு கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்யுங்கள் அப்பொழுது உங்களுக்கு புரியும் எந்தளவுக்கு கர்மா வேலை செய்கின்றது என்பது தெரியும். 

ஜாதகத்தை நீங்கள் வாங்குப்பொழுதே உங்களுக்கு தெரியும் அப்பொழுதே உங்களுக்கு பிரச்சினை வரும். கர்மா என்பது இப்படிதான் வேலை செய்கின்றது. நாங்கள் எல்லாம் தினந்தோறும் இப்படிப்பட்ட கர்மாவில் தான் காலம் தள்ளிக்கொண்டு இருக்கிறோம்.

கர்மா என்பது எங்களை நோக்கி தினமும் நிறைய வருகின்றது. அதனை போக்கிக்கொண்டு இதனை செய்துக்கொண்டு இருக்கிறோம். கர்மா நம்மே நோக்கி அதிகமாக தாக்கம் செய்யாமல் அதனை போக்கிக்கொண்டே சென்றுக்கொண்டு இருக்கின்றேன்.

ஒவ்வொருநாளும் ஏற்படும் கர்மாவை போக்க அதற்குரிய வேலைகளை செய்துக்கொண்டே இருக்கவேண்டும். என்ன செய்கிறோம் என்பதை வெளியில் சொல்லுவது கிடையாது நீங்கள் செலுத்தும் பணத்திற்க்கு நாற்பது சதவீதமாவது வெளியில் சென்றுவிடும்.

பல நல்ல காரியங்களை செய்வதை வெளியில் காட்டிக்கொள்வதில்லை.  எங்கோ தினமும் ஏதாே ஒரு வகையில் அது செலவு செய்யப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. கர்மா அதிகமாக இருக்கும்பொழுது நான் முடங்கிவிடுவேன் என்பது எனக்கு நன்றாக தெரிகிறது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: