Followers

Saturday, July 14, 2018

மறைவுஸ்தானத்தில் இராஜகிரகங்கள்



வணக்கம்!
         ஒரு சில ஜாதகத்தில் இராஜகிரகங்கள் என்று சொல்லக்கூடிய குரு மற்றும் சனி மறைவுஸ்தானத்திற்க்கு சென்றுவிட்டால் அவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் ஒரு நிச்சயமற்ற தன்மை நிலவும். எந்த வித வேலை எடுத்தாலும் இழுபறியில் சென்றுக்கொண்டு இருக்கும்.

இவர்கள் ஏதாவது ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தாலும் அவர்களின் கம்பெனி கொஞ்ச நாளில் திவாலாகிவிடும். கம்பெனி கடனில் மூழ்கிவிடும். கம்பெனியை தேடி வரும் கடன்காரர்களுக்கு இவர்கள் பதில் சொல்லிக்கொண்டு இருக்கவேண்டிவரும்.

குரு மற்றும் சனி மறைவுஸ்தானத்திற்க்கு செல்லும்பொழுது ஒருவர் எடுத்த எந்த ஒரு காரியமும் தடை என்பது இறப்பு சம்பந்தப்பட்டதாகவே இருக்கும். ஒரு சுபகாரியம் இவர் வீட்டில் நடத்தினாலும் பக்கத்தில் யாராவது ஒருவர் இறந்துவிடுவார்கள். இவர்களுக்கு நல்லசகுனமாக அதனையே எடுத்துக்கொண்டு செய்யலாம்.

சுபக்காரியம் என்றாலும் ஒரு கோவில் நிகழ்ச்சியை இவர்கள் செய்தாலும் இவர்களுக்கு ஒரு தடை உருவாகிய பிறகு தான் அந்த நிகழ்வுகள் நடக்க ஆரம்பிக்கும். தடை ஏற்பட்ட பிறகு இவர்கள் செய்தால் அது வெற்றியை நோக்கி செல்லும் என்று சொல்லலாம்.

குரு கிரகம் மற்றும் சனிக்கிரகம் மறைவுஸ்தானத்திற்க்கு சென்றவர்கள் வாழ்வில் முன்பகுதியில் அதிக கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பார்கள். பின்பகுதியில் நல்ல நிலைக்கு வருவார்கள். ஒரு காலம் வரை கஷ்டம் இருக்கும் அதன்பிறகு அது யோகமாக மாறிவிடும்.

இன்று சென்னை பயணம் செய்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: