Followers

Monday, July 30, 2018

கிரகங்கள் தரும் கஷ்ட நேரம்


வணக்கம்!
          ஒரு சில ஜாதகங்கள் அடிப்பட ஆரம்பித்தால் அது பெரியளவில் பிரச்சினையை கொண்டு வந்துவிட்டுவிடும். அதிகப்பட்சம் அனைவருக்கும் இப்படி தான் நடக்கின்றது. கஷ்டம் வர ஆரம்பித்தால் அது பெரிய அளவில் கஷ்டத்தை கொடுக்க ஆரம்பித்துவிடுகின்றது.

ஒருவருக்கு தொடர்ச்சியான கஷ்டம் வர ஆரம்பித்துவிட்டால் அவர் மீண்டு வருவதற்க்கு குறைந்தபட்சம் பத்து வருடங்களாவது தேவைப்படுகின்றது. பத்து வருடத்திற்க்கு அவரின் வாழ்க்கை முழுவதும் திசை திரும்பிவிடுகின்றது.

பத்து வருடங்களுக்கு பிறகு நல்ல காலம் வர ஆரம்பித்தாலும் அவர்களால் ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்குவதற்க்கு மிகுந்த பாடுபட வேண்டும். அவர் இழந்ததை அனைத்தும் பிடிப்பது கடினமாக போய்விடும். ஒரு சில தசாகிட்ட மாட்டினால் அவன் பாடு பெரும் திண்டாட்டம் தான் அவர்களை காப்பாற்றுவது மிக மிக கடினம். சனி இராகு கேது தசா போன்ற தசாக்களில் மாட்டினவர்களின் பாடு திண்டாட்டம். விழித்துக்கொண்டு செயல்பட்டால் இதில் இருந்து தப்பிக்கலாம்.

கஷ்டகாலத்தில் நாம் என்னதான் சொன்னாலும் அவர்கள் கேட்கபோவதில்லை. ஜாதக கதம்பத்திலேயே நிறைய பேர் அப்படி தான் இருக்கின்றனர். நாம் என்ன தான் சொன்னாலும் இதனை எல்லாம் நான் நம்ப தேவையில்லை என்று கூட இருக்கின்றனர். மேலும் மேலும் கஷ்டத்தை அதிகப்படித்துக்கொண்டே செல்கின்றனர்.

நான் அனைவரும் நம்மிடம் வரத்தான் இதனை சொல்லுகிறேன் என்பது கிடையாது. அவர் அவர்களின் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் செல்லும் சூழ்நிலை எப்படிப்பட்டது என்பதை அறிந்து அதற்கு தகுந்தார் பாேல் உள்ள நிலையை சொல்லுகிறேன்.

ஆடி மாதம் முழுவதும் இலவச சோதிட ஆலோசனை சொல்லிக்கொண்டு இருக்கிறேன். அனைவரும் இதில் பங்குக்கொண்டு பயன்பெறுமாறு அன்போடு வேண்டுகிறேன். பல தடவை பதிவில் சொல்லுவதின் நோக்கம் அனைவரும் பயன்பெறவேண்டும் என்பதற்க்காக தான் சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: