Followers

Friday, July 27, 2018

என்னுடைய ஆசி


வணக்கம்!
          ஆடி மாதம் மட்டும் எனக்கு பணத்தை செலுத்தி வையுங்கள் என்று வருடம் வருடம் சொல்லும் இரகசியம் இருக்கின்றது. இன்றைய நாளை பலர் மறந்துபோய்விட்டார்கள் என்று தான் தோன்றுகிறது. அதற்கு காரணம் ஒருவரும் விழிப்போடு இருப்பதில்லை என்பது எனக்கு நன்கு தெரிகிறது.

பாக்கியத்திற்க்கு எல்லாம் பெரும் பாக்கியம் என்ன தெரியுமா அவர் அவர்களின் குருவிற்க்கு நன்றியோடு இருப்பது. குருவின் ஆசியை சரியான நேரத்தில் பெறுவது தான் பெரிய பாக்கியம். இன்று ஆடி பெளர்ணமி அதோடு எனக்கு காலையில் அம்மன் யாகம் வேறு இருந்த காரணத்தால் காலையில் செல்போனை எடுக்கமுடியவில்லை. பலர் எனக்கு காலையில் போன் செய்துவிட்டார்கள். அனைவருக்கும் மறுமுறை நானே போன் செய்து பேசிவிட்டேன்.

பல நெருங்கிய வட்டம் என்னை நேரில் வந்து சந்தித்துவிட்டு சென்றுவிட்டனர். என்ன விவரம் என்று தெரியாத உங்களுக்கும் என்னுடைய ஆசிகளை கொடுத்து இருக்கிறேன். என்னுடைய குருவின் ஆசியும் உங்களுக்கு கிடைக்கும். காலையிலேயே இந்த பதிவை கொடுத்து இருக்கலாம் எத்தனை பேர் விழிப்புணர்வோடு செயல்படுகின்றீர்கள் என்று பார்க்க தான் இத்தனை தாமதமாக இதனை வெளியிடுகிறேன்.

ஒவ்வொரு நாளும் ஏன் ஒவ்வொரு தமிழ்மாதமும் ஆரம்பிக்கும்பொழுது அந்த மாதத்தில் என்ன என்ன வருகின்றது. நாம் இந்த மாதத்தில் எப்படி செயல்படபோகின்றோம் என்பதை எல்லாம் திட்டம் தீட்டி செயல்படுங்கள். கிரகங்களை எல்லாம் மிஞ்சி நீங்கள் சூப்பராக வாழலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: