Followers

Tuesday, July 3, 2018

அம்மன் பூஜை


வணக்கம்!
          நவஅம்மன்(சண்டி) யாகம் நிறைவு பெறும் தருவாயில் இருக்கின்றது. நவஅம்மன்(சண்டி)யாகம் நடைபெற உதவிய அனைத்து நண்பர்களுக்கும் அவரது குடும்பத்திற்க்கும் நல்ல அருளை கொடுக்கும். ஜாதக கதம்பத்தை படிக்கும் அனைவருக்கும் அருள் கிடைக்கும். உலகத்திற்க்கே நல்ல அருள் கிடைக்கும் என்று சொல்லலாம்.

மாதந்தோறும் அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் தனியாக கட்டணம் செலுத்தவேண்டியதில்லை. அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்த தான் அனைத்து பூஜைகளும் நடைபெறும் என்பதில் அடிக்கடி சொல்லிவருகிறேன். விருப்பம் இருந்தால் மட்டும் செலுத்திவைக்கலாம்.

ஒவ்வொரு இடத்திற்க்கும் செல்லும்பொழுது நம்முடைய நண்பர்களின் அடிப்படை பிரச்சினையாக இருப்பது அவர்களிடம் பணம் இல்லை என்பது தான் முதல் பிரச்சினையாக இருக்கின்றது. வரும் முக்கால்வாசி பேர்களுக்கு இந்த பிரச்சினை இருக்கும்.

ஒவ்வொரு பூஜையிலும் இந்த பிரச்சினையை ஒவ்வொருவருக்கும் தீரவேண்டும் என்று வேண்டுதல் வைத்துக்கொண்டே வருகிறேன். நாம் செய்யும் பூஜைகளால் கண்டிப்பாக உங்களுக்கு பணப்பிரச்சினை படிப்படியாக குறையும்.

இந்த மாதம் நடைபெறும் அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தி வைக்கலாம். 

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த காலம் என்பதால் ஆடி மாதத்தில் சிறப்பு பூஜை நடக்க இருக்கின்றது. உங்களுக்கு முன்கூட்டியே இந்த தகவலை தெரிவித்துவிடுகிறேன். நேற்று ஒருவர் என்னை தொடர்புக்கொண்டு ஆடி மாதம் முழுவதும் நடைபெறும் பூஜையின் மொத்த செலவையும் ஏற்கிறேன் என்றார். தனிநபர்க்களுக்கு கொடுக்கவேண்டாம் என்று இருக்கிறேன்.

ஜாதககதம்பத்தில் வரும் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். ஒருவர்க்கு மட்டும் கொடுக்கவில்லை என்று சொல்லிவிட்டேன். ஆடிமாதத்தில் சிறப்பாக அனைத்தும் அம்மன் அருளால் நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: