Followers

Thursday, July 19, 2018

கோச்சாரபலன் கொடுக்கும் குறுகிய வாழ்வு


ணக்கம்!
         எப்படியும் பதிவை தந்துவிடவேண்டும் என்று நினைக்கிறேன். அவசர வேலையாக வெளியில் சென்றுவிடுவதால் எழுதமுடியவில்லை. கூடுமானவரை முன்கூட்டியே பதிவை எழுதிவைத்து தான் கொடுக்கவேண்டும்.

ஆடிமாதம் வெள்ளிக்கிழமையில் அம்மனுக்கு சிறப்பு யாகம் சொல்லிருந்தேன். வெள்ளிக்கிழமை அன்று யாகம் நடைபெறும்.நிறைய மாற்றங்களை ஒவ்வொருவரின் வாழ்விலும் சிறப்பான பலனை அம்மன் தரும் என்ற நம்பிக்கையோடு செய்ய இருக்கிறேன்.

ஒரு சில கிரகங்கள் தங்களின் பலனை கோச்சாரபலனோடு முடித்துவிட்டு தசா பலன்களில் ஒன்றும் கொடுப்பதில்லை. இப்படிப்பட்ட ஜாதகர்களை நிறைய பேரை பார்த்து இருக்கிறேன். 

கோச்சாரபடி பலன்களை கொடுத்தால் அவர்களுக்கு வாழ்வில் ஒரு குறிப்பிட்ட காலம் நல்ல பலனை கொடுக்கும் அதன்பிறகு அவர்களுக்கு கஷ்டக்காலம் வந்துவிடும். கோச்சாரபடி பலனை கொடுத்தால் இரண்டரை வருடம் பணம் கொடுத்தால் அதன்பிறகு பணத்தை கொடுக்காது ஜாதகர் மாட்டிக்கொள்வார்.

தசாபலன்களை கொடுக்கும்படி ஜாதகர் அந்த கிரகத்திற்க்கு நிறைய பரிகாரங்களை செய்யும்பொழுது மட்டுமே அவர் வாழ்க்கை முழுவதும் நல்ல பலன்களை பெறமுடியும். கஷ்டப்பட்டு தான் இதனை எல்லாம் செய்து அவர் பலனை அனுபவிக்கவேண்டும்.

இன்று மதுரைக்கு செல்கிறேன். மதுரையில் இருந்து திரும்பியபிறகு உங்களுக்கு பதிவை தருகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: