Followers

Thursday, July 12, 2018

வேண்டுகோள்


வணக்கம்!
         தொழில் செய்பவர்கள் வருகின்ற ஆறு மாதத்தில் சம்பாதிக்க வழி செய்துக்கொள்ளுங்கள் அதன்பிறகு நாடாளுமன்ற தேர்தல் வந்துவிடும். தேர்தல் வருகின்றது என்று ஒருத்தரும் வேலையை பார்க்காமல் தொழில் அப்படியே மந்தநிலையை தரும்.

வருகின்ற ஆறுமாதத்தில் நீங்கள் நன்றாக சம்பாதித்துவிடவேண்டும் என்பதற்க்காக முன்கூட்டியே இந்த கருத்தை உங்களிடம் தெரிவிக்கிறேன். என்னிடம் பலர் தொழில் செய்பவர்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் இந்த ஆறு மாதத்தில் கடுமையாக உழைத்து சம்பாதித்துவிடுங்கள்.

நம்ம ஆளுங்க ஒரு காரணம் வந்தாலே அதனை சொல்லியே ஒன்றும் செய்யாமல் இருந்துவிடுவார்கள். இவர்கள் காரணத்தை மட்டுமே சொல்லிக்கொண்டு காலத்தை தள்ளுவார்கள். காரணத்தை காட்டி தொழில் செய்யமாட்டார்கள். 

2019 நீங்களே புரிந்துக்கொள்ளலாம் ஏதாவது தொழில் என்று சென்றால் தேர்தல் முடியட்டும் என்று சொல்லுவார்கள். தேர்தல் முடிந்தால் மட்டும் பெரிய மாற்றம் வந்துவிடபோகின்றதா? எதுவும் நடக்காது. காரணத்தை சொல்லி காலத்தை தள்ளுவார்கள்.

வருகின்ற ஆறு மாதத்தில் மிகப்பெரிய அளவில் ஒவ்வொருவரையும் கொண்டுவருவதற்க்கு உள்ள ஆன்மீக வேலையும் நான் செய்ய உள்ளேன். அதே நேரத்தில் உங்களின் பங்களிப்பும் இதற்கு தேவை. காலத்தை வீணாக்காமல் அதிகமாக ஓடி வேலையை பார்த்து நன்றாக சம்பாதியுங்கள். அம்மன் உங்களுக்கு அருள் புரியும்.

ஆடி மாத பூஜைக்கு புக்கிங் செய்பவர்கள் உடனே தொடர்புக்கொள்ளவும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: