Followers

Sunday, July 15, 2018

பாவம் எத்தனை தோஷம்?


ணக்கம்!
          ஒருவருக்கு அரேன்ஜ் திருமணம் செய்யும்பொழுது அவரின் பெண் வீட்டிற்க்கு சென்று பெண் பார்க்கிறார் என்று வைத்துக்கொள்வோம். முதலில் ஒரு ஆண் ஒரு பெண்ணை பெண் பார்த்தால் அந்த பெண்ணை பிடிக்கவில்லை என்று வரக்கூடாது.

ஒரு பெண் வீட்டிற்க்கு சென்று பெண்ணை பிடிக்கவில்லை என்று வந்துவிட்டால் அந்த பெண்ணின் மனது கஷ்டப்படும். பெண் மனது கஷ்டப்பட்டால் அது பாவமாக கருதப்படும். இதன் வழியாக கூட ஒருவருக்கு பாவம் வருகின்றது.

முதன் முதலில் ஒரு ஆண் பெண்ணை பார்க்க செல்லும்பொழுது அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் இதனை அறிவார்கள். இவர் அந்த பெண்ணை பிடிக்கவில்லை என்று வரும்பொழுது பக்கத்தில் உள்ளவர்களும் ஒரு மாதிரியாக பேசுவார்கள் அல்லவா அந்த பாவத்தையும் இவர் ஏற்கவேண்டும்.

மேலே சொன்னதை எல்லாம் நான் ஏன் உங்களிடம் சொல்லுகிறேன் என்றால் ஒருவர் நான் பாவமே செய்யவில்லை என்று சொல்லுவார்கள். இவர்கள் இப்படிப்பட்ட பாவத்தை கூட செய்து இருக்கலாம் என்பதை சொல்லுவதற்க்கு சொல்லுகிறேன்.

பலர் நிறைய தவறுகளை செய்துவிட்டு எனக்கு கடவுள் ஒன்றும் கொடுக்க மாட்டேன்கிறார் என்று சொல்லுவார்கள். முதலில் எங்கு எல்லாம் பாவம் செய்திருக்கிறோம் என்று எண்ணி பார்த்தால் நிறைய தவறு நம்மால் இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: