Followers

Tuesday, December 25, 2012

கோச்சார பலன் சனி பகுதி-2


சனிபகவான் நாலாமிடத்திற்க்கு வரும்போது அவ்வளவு நல்ல பலன்களை எதிர்பார்க்கமுடியாது. நான்காம் இடம் சனி அர்த்தாஷ்டம சனியாகிறார். அஷ்டம சனியின் தாக்கத்தில் பாதி பலனை சனி பகவான் தருகிறார். உங்களுடைய அந்தஸ்தை குறைக்கும் வகையில் சனிபகவான் செயல்படுவார். தாயாரின் உடல்நிலை கெடும். நீங்கள் வண்டி வாகனங்கள் வைத்திருந்தால் அதன் வழியாக பிரச்சினை ஏற்படும். யாரிடமாவது பணஉதவி கேட்டாள் உடனே கிடைக்காது அதனால் மனசஞ்சலம் அடையும்.நீங்கள் செய்கின்ற தொழிலில் கடும் போட்டி ஏற்பட்டு உங்களின் லாபம் குறையும். நீங்கள் நடத்தும் தொழிலில் பணியாளர்கள் பிரச்சினை ஏற்பட்டு உங்கள் தொழில் குளறுபடி ஏற்படும்.

சனிபகவான் ஐந்தாமிடத்திற்க்கு வரும்போது நீங்கள் செய்கின்ற தொழிலில் தடங்கல் மேல்அதிகாரிகளின் கோபத்திற்க்கு ஆளாகலாம். உங்களின் பிள்ளைகளால் உங்களுக்கு பிரச்சினை வரும். உங்களின் பூர்வீகசொத்து பிரச்சினையை தரும்.சனி அமருமிடம் பூர்வபுண்ணிஸ்தானம் ஆதலால் நீங்கள் செய்த பூர்வபுண்ணியத்திற்க்கு ஏற்ப பலன்களை தரும். உங்களின் குழந்தைகள் உங்களின் சொல்லை கேட்டு நடக்கமாட்டார்கள் அதனால் உங்களின் குடும்பத்தில் பிரச்சினை உருவாகும். சுயதொழில் செய்கின்றவராக இருந்தால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பங்குசந்தையில் முதலீடு செய்பவராக இருந்தால் உங்களின் முதலீடு மீது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது அப்படி இல்லையென்றால் உங்களின் முதலீடு நஷ்டத்தை சந்திக்கும்.

சனிபகவான் ஆறாமிடத்திற்கு வரும்போது நீங்கள் எடுக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். இஷ்டதெய்வ அருள் நன்றாக கிடைக்கும். கடனை அடைப்பீர்கள். தந்தை வழி உறவினர்கள் முன்வந்து உதவுவார்கள். நீங்கள் சுயதொழில் செய்துவந்தால் உங்களின் முயற்சியால் உயர்வீர்கள். நண்பரகள் அனைவரும் உங்களுக்கு உதவுவார்கள். நண்பர்களுடன் விருந்து கேளிக்கை என்று ஈடுபடுவீர்கள். சொத்துக்களை வாங்கும் காலம் இது. தொழிலில் எதிர்ப்புகள் விலகும் காலம் இது. நீங்கள் அரசியலில் ஈடுபட இது பொற்காலம். அரசியலில் ஈடுபட்டால் எளிதில் வென்றுவிடலாம். ஏதாவது வழக்குகள் நீதீமன்றத்தில் இருந்தால் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

No comments: