Followers

Monday, December 3, 2012

அன்பான அறிவிப்பு



வணக்கம் நண்பர்களே!
                           நமது ஜாதக கதம்பத்தில் இலவச சோதிடம் பலனை சொல்லிக்கொண்டு இருக்கிறோம் அதன் வழியாக என்னை தொடர்புக்கொள்பவர்கள் மீண்டும் மீண்டும் என்னை தொடர்புக்கொள்ள வேண்டாம் என்று சொல்லுகிறேன் ஏன் என்றால் இலவச சோதிடம் மூலம் ஒரு தடவை மட்டும் உங்களுக்கு பலன் சொல்லப்படும். நீங்கள் மீண்டும் மீண்டும் தொடர்புக்கொள்வதாக இருந்தால் கட்டண சோதிடத்தில் வந்துவிடுங்கள். 

ஆன்மீக அனுபவங்களை படித்துவிட்டும் என்னை நேரிடையாக சந்திக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு வருகிறார்கள் அதனை தவிருங்கள். என்னிடம் சீடனாக வருபவருக்கு மட்டுமே சொல்லிதரமுடியும். அனைவரும் என்னை சந்திப்பது வீணான செயல் தான் உங்களின் நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை அதைப்போல் என்னுடைய நேரத்தையும் நான் வீணடிக்க விரும்பவில்லை. 

நான் திருவண்ணாமலை சென்று வந்ததை பதிவாக எழுதியிருந்தேன் அதை பார்த்துவிட்டு மீண்டும் நீங்கள் எங்காவது சென்றால் பதிவாக போட்டுவிட்டு செல்லுங்கள் நாங்களும் வருகிறோம் என்று பல நண்பர்கள் சொல்லிருந்தார்கள் அவர்களுக்கு அப்பதிவிலேயே சொல்லிருந்தேன் மீண்டும் சொல்லுகிறேன் என்னால் ஒன்றும் நடக்காது நான் ஜாலியான ஆள் என்னை பார்த்தால் ஆன்மீகவாதியாக தெரியாது. 

நான் எங்கு சென்றாலும் ஜாலியாக இருக்கவேண்டும் என்று நினைப்பவன். இது எல்லாம் உங்களுக்கு ஒத்து வராது. உங்களுக்கு சொல்லிக்கொடுத்தவர் ஆன்மீகம் என்றால் அப்படி இருக்க வேண்டும் இப்படி இருக்க வேண்டும் என்று சொல்லிகொடுத்துருப்பார் எனது குரு அப்படி இல்லை அதனால் நீங்கள் தேடும் ஆன்மீகவாதியாக நான் இருக்கமாட்டேன். ஜாலியாக ஆன்மீகஸ்தலங்களுக்கு செல்பவராக இருந்தால் வரலாம்.

அனைவரும் ஆன்மீகத்தில் ஏகாப்பட்ட கட்டளை போட்டு அப்படி இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் நாம் கொஞ்சம் வித்தியாசமாக நீ எப்படி வேண்டுமானாலும் இருங்கள் என்று சொல்லுகிறோம் அவ்வளவு தான். ஏன் என்றால் அதை பண்ணாதே இதை பண்ணாதே என்று சொன்னால் ஒருவரும் அதில் தேறமாட்டார்கள் என்று எனக்கு தெரியும் அதனால் நான் அனைத்தையும் செய்யுங்கள் என்று சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


3 comments:

karthik said...

வணக்கம் நண்பரே நான் தங்களை 2 முறை தொடா்பு கொன்டு தங்களின் நேரத்தை வீணாக்கியதற்க்கு வருந்துகிறேன் நண்பரே

rajeshsubbu said...

/* karthik said...
வணக்கம் நண்பரே நான் தங்களை 2 முறை தொடா்பு கொன்டு தங்களின் நேரத்தை வீணாக்கியதற்க்கு வருந்துகிறேன் நண்பரே */

வணக்கம் நண்பரே நீங்கள் எப்பொழுதும் தொடர்பு கொள்ளலாம் என்று உங்களிடமே சொல்லியுள்ளேன் மறந்துவிட்டீர்களா

KJ said...

Sir, pl write about ragu kethu peyarchi for remaining rasi,s also.