Followers

Thursday, December 27, 2012

கோச்சார பலன் சனி நிறைவுபகுதி



சனி பகவான் பத்தாமிடத்திற்கு வரும்போது செய்தொழில் முன்னேற்றம் ஏற்படும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். தேவையற்ற பேச்சு பிரச்சினைகளை கொண்டுவந்து தரும் என்பதால் எச்சரிக்கை தேவை. மனைவி மக்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். தாய் வழி உறவினர்கள் உங்களிடம் கொண்ட அன்பு குறையும். எதிரிகளால் இருந்த எதிர்ப்பு குறையும். வீண் அலைச்சல் இருந்தாலும் மனதில் நிம்மதி இருக்கும். முதலீடு செய்வதில் கவனம் தேவை. வேலை செய்து கொண்டு இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு இருக்கும்.

சனி பகவான் பதினொன்றாமிடத்திற்க்கு வரும்போது நீங்கள் நினைத்தது கைகூடும். லாபம் அதிகரிக்கும். எதிரிகள் பார்த்து வியக்கும் அளவுக்கு உங்களின் வாழ்க்கை தரம் உயரும். திருமண ஏற்பாடு நடைபெறும். சொத்து வீடு வாகனங்கள் வாங்கும் யோகம் உங்களுக்கு கிடைக்கும். வெளி பயணங்களால் ஆதரவு கிடைக்கும். உங்கள் நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். அரசு துறையில் தனியார் துறையிலும் வேலை பார்ப்பவர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். பணிசெய்யும் இடத்தில் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.

சனி பகவான் பன்னிரெண்டாமிடத்திற்க்கு வரும்போது ஏழரை சனி ஆரம்பம் ஆகிவிட்டது உடல்நிலை மற்றும் மனநிலையில் கவனம் செலுத்துவது நல்லது. எதிரிகள் தொல்லை தர ஆரம்பிப்பார்கள். குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு செலவு அதிகமாக செய்ய வேண்டிய நிலை ஏற்படும். வெளியூர் பயணங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் ஆனால் அதற்கு கடும் முயற்சி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். வேலை செய்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். சில பேருக்கு வேலை கிடைக்காமல் போகும் நிலை ஏற்படலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


No comments: