Followers

Friday, December 21, 2012

குங்குமம் தரும் பயன்



வணக்கம் நண்பர்களே !

                                 குங்குமத்தினால் என்ன பயன் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்

ஆன்மிகத்தில் முக்கிய இடம் வசிக்கும் குங்குமம் அழகு சாதன பொருட்கள் வரிசையிலும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

அழகாக ஆடை அணிந்து இரு புருவங்களுக்கு மத்தியில் நெற்றி வகிட்டில் குங்குமத்தை இட்ட பெண்களை பார்க்கும் போது லஷ்மிகரமாக தோன்றுவதை காணலாம்.

நெற்றியில் குங்குமம் இட்டவர்களை ஹிப்நாட்டிஸம் மெஸ்மெரிஸம் செய்ய முடியாது ஒருவரை அமைதிபடுத்தும் சக்தியும் இதற்கு உண்டு.

படிகாரம் சுண்ணாம்பு தண்ணீர் மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்துதான் குங்குமம் செய்ய வேண்டும் இதில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில் இரும்புசத்தாக மாறிவிடும் படிகாரம் கிருமி நாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரவே வராது தொற்றுநோய் கிருமிகளும் நெருங்காது.

மூளைக்கும் உடலின் பிற பகுதிகளுக்கும் செல்லும் நரம்புகளுக்கு நெற்றிவகிட்டில் குங்குமம் இடுவதால் சக்தி கிடைக்கிறது.

மூளைக்கு செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல் அதை கட்டுப்படுத்திக்கூடிய பகுதி நெற்றி அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த சூடு தணிகிறது.

நெற்றியில் குங்குமம் இட்டுக்கொண்டு சூரிய நமஸ்காரம் செய்வதால் தனி பலன் கிடைக்கும் என்பதை அனுபவப்பூர்வமாக உணரலாம்.

சூரியனின் கதிர்கள் நெற்றியில் இட்டுள்ள குங்குமத்தின் மீது படும்போது குங்குமத்துடன் சேர்க்கப்படும் படிகாரம் சுண்ணாம்பு தண்ணீர் மஞ்சள் மற்றும் வைட்டமின் டி அல்ட்ரா கதிர்கள் ஆகியவை ஒன்று சேர்ந்து காந்த சக்தியை உருவாக்குகின்றன.

இதனால் குங்குமம் இட்டுக்கொள்பவருக்கு புதிய பவர் கிடைக்கிறது,
குங்குமம் முறையாக தயாரித்தால் தான் இந்த பலன்களை அனுபவிக்க முடியும். கலப்படமான குங்குமத்தை இட்டுக்கொள்வதால் சில பிரச்சினைகள் வரலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

No comments: