Followers

Wednesday, December 26, 2012

ஆன்மீக அனுபவங்கள் 39


வணக்கம் நண்பர்களே!
                                       காலையில் எழுதிய ஆன்மீக அனுபவங்கள் பதிவை படித்துவிட்டு அதற்குள் பல நண்பர்கள் தொடர்பு கொண்டுவிட்டார்கள். நாங்களும் புண்ணிய ஆத்மாவை தரிசித்து ஆசீர்வாதம் செய்கிறோம் என்று சொன்னார்கள்.

என்னுடைய நேரிடையான வாடிக்கையாளர்களை இப்படி சந்திக்கவைப்பது நான் சோதிடம் பார்க்க ஆரம்பித்த நாட்கள் முதல் இன்று வரை நடந்துக்கொண்டு தான் இருக்கிறது ஆனால் நெட் வழியாக வரும் வாடிக்கையாளர்களை நான் அவ்வாறு சந்திக்க வைப்பதில்லை. ஏன் என்றால் பெரும்பாலும் இவர்கள் கணிணி துறையில் இருப்பவர்களாக இருக்கிறார்கள் அவர்களுக்கு விடுமுறை கிடைத்தாலும் அவர்கள் குடும்பத்துடன் இருக்கின்ற பொழுது நிம்மதி கிடைக்கும் என்பதால் இதனை நான் சொல்லாமல் இருந்தேன். 

நெட்டில் படித்த நண்பர்கள் நெருங்கி பழகிவிட்டதால் அவர்கள் பேசும்போது எங்களுக்கும் இப்படி ஏற்பாடு செய்து தாருங்கள் என்று சொன்னார்கள் அத்துடன் இதனை பதிவுகளிலும் தெரியப்படுத்துங்கள் என்றும் சொன்னார்கள் அதனால் இதனை தெரியப்படுத்தினேன் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

புண்ணிய ஆத்மாக்களைபபற்றி சொல்லவேண்டும் என்றால் இவர்கள் சாமியார்கள் தான் இவர்களிடம் நீங்கள் ஆசீர்வாதம் வாங்கினால் உங்களின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழும் இதனை நான் பல நேரிடையான சோதிடவாடிக்கையாளர்களின் வாழ்க்கையில் நான் பார்த்து இருக்கிறேன். இவர்களை பார்ப்பதற்க்கு பரதேசி போல் இருப்பார்கள் வெளியில் அவ்வளவு எளிதில் அடையாளம் காணமுடியாது. நம் ஊர் சாமியார்கள் போல் இருக்கமாட்டார்கள் இவர்களுக்கு ஆத்ம பலன் அதிகம்.

இவர்கள் அனைவரும் சிவனின் அம்சம் தான். இவர்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ள மாட்டார்கள். இவர்களில் ஒரு சிலர் போதை வஸ்துகளை உபயோகப்படுத்துவார்கள். நீங்கள் நினைக்கலாம் என்னடா போதை வஸ்துகளை உபயோகப்படுத்துபவர் எப்படிடா புனிதஆத்மாவாக இருக்கமுடியும் என்று கேட்கலாம். இவர்கள் தாம்பத்திய வாழ்க்கை மட்டும் வாழமாட்டார்கள் இவர்களின் பலமே அது தான் அதனை வைத்துக்கொண்டு உயர்நிலையை அடைவார்கள். நீங்கள் நல்ல ஆன்மீகவாதியாக இருந்தால் இவர்களை நீங்கள் எளிதில் அடையாளம் கண்டுவிடுவீர்கள்.

நான் இவர்களிடம் கேட்பேன் நீங்கள் போதை வஸ்துகளை உபயோகப்படுத்துகிறீர்கள் எப்படி சாமியார் என்று கேட்பேன் அவர்கள் பதில் நாங்கள் எதுவும் பயன்படுத்தலாம் ஆனால் எங்கள் உடலில் இருந்து விந்து மட்டும் வெளியில் வரக்கூடாது என்பார்கள். இவர்களுக்கு என்று தனியாக குடும்பம் ஏதம் இல்லை. அனைவரும் சந்நியாசிகளே இப்படிப்பட்ட சந்நியாசிகள் தமிழ்நாட்டிற்க்கு வருகிறார்கள் இவர்கள் வரும்போது அவர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் அப்பொழுது நான் எனது சோதிட வாடிக்கையாளர்களை சந்திக்கவும் ஏற்பாடு செய்வேன். இவர்கள் பொதுவாக அதிகமாக பேசமாட்டார்கள். தமிழ் தெரியாது.

இவர்களிடம் ஆசீர்வாதம் மட்டும் வாங்கினால் போதும். இப்படிபட்டவர்களை சந்திக்க உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன். என்னுடைய குருநாதரையும் நீங்கள் சந்திக்கலாம்.  குருநாதர்வுடன் பேசும்போது நீங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்துக்கொள்ளலாம். என்னுடைய குருநாதருக்கு பத்து இந்தியமொழிகள் தெரியும். இந்தி விருப்பமாக பேசுவார்.

இப்படிபட்டவர்களை நீங்கள் சந்திப்பது என்றால் என்னிடம் உங்களின் விருப்பத்தை தெரியப்படுத்துங்கள் அவர்களை சந்திக்க நான் ஏற்பாடு செய்கிறேன். இதற்கு நீங்கள் செலவு செய்யவேண்டியதில்லை. அனைத்தும் இலவச சேவை.

அவர்களின் சந்திப்பு உங்கள் ஜாதகத்தில் ஏற்பட்ட தோஷத்திற்க்கு சரியான பரிகாரமாகக் கூட இருக்கும் என்பதை மறவாதீர்கள். அவர்களின் ஆசி மிகப்பெரிய புண்ணியமாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: