Followers

Saturday, December 29, 2012

பூர்வ புண்ணியம் 5



வணக்கம் நண்பர்களே!
                                ஆத்மாக்களின் ஏக்கங்கள் தாகங்கள் மற்றும் அதனுள் படிந்துள்ள ஆசைகள் வெறிகள் என்ன என்று பார்த்தோம் அதனைப்பற்றி விரிவாக இந்து மதசடங்களில் இருந்தும் பார்க்கலாம்.

ஒவ்வொரு ஆத்மாவிற்க்கும் பிறவிகளின் வாசனை உள்ளது. ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொள்கிறார் என்று வைத்துக்கொள்வோம் அந்த கடைசி நேரத்தில் அவரின் உயிர் அந்த உடம்பு மேல் பாசம் கொண்டு உயிரை காப்பாற்றிக்கொள்ள கடுமையாக போராடும். கடைசியில் அந்த உயிரை காப்பாற்றிக்கொள்ளமுடியவில்லை என்றால் இந்த ஆத்மா மிகவும் வெறிக்கொண்ட ஆத்மாவாக மாறிவிடும். இந்த ஆத்மாவிற்க்கு எப்படா உடம்பு கிடைக்கும் என்ற வெறியில் தான் இருக்கும்.

கடைசி நேரத்தில் அந்த ஆத்மா உடம்பின் மேல் பற்றுக்கொண்டு உடம்பை விடுவதால் அந்த வெறி இருக்கிறது. இதே போல் பாதிக்கப்பட்டு இறக்கும் ஒவ்வொரு ஆத்மாவிற்க்கும் கதி இது தான். அந்த ஆத்மா உடனே பிறப்பை எடுத்துவிட்டால் ஒன்றும் பிரச்சினை இல்லை. பிறப்பை எடுக்கவில்லை என்றால் கஷ்டம் தான்.

நமது ஊரில் ஒருவர் இறந்துவிட்டால் அவரை சுடுகாட்டிற்க்கு எடுத்துச்செல்வார்கள் அப்படி எடுத்து செல்லும் உடலை பார்த்தீர்கள் என்றால் வீட்டிலிருந்து எடுக்கும்போது அந்த உடலின் தலை வீட்டை பார்த்துக்கொண்டு செல்லும் அதன் பிறகு ஒரு முச்சந்தியில் வைத்து அந்த உடலை சுற்றிவிட்டு சுடுகாட்டை பார்ப்பது போல் எடுத்துச்செல்வார்கள் இது ஏன் என்றால் அந்த முச்சந்தியில் அந்த ஆத்மாவை நிறுத்துவதற்க்காக இந்த சடங்கு செய்வார்கள்.

உடலை எரியூட்டப்படலாம் அதை அந்த ஆத்மா பார்க்ககூடாது அப்படி பார்த்தால் அந்த ஆத்மா கதறிவிடும் என்பார்கள். ஆத்மாவிற்க்கு வெறி ஏற்படக்கூடாது என்பதால் இந்த சடங்கு செய்து முச்சந்தியில் நிற்பாட்டுவது வழக்கம். இது எல்லாம் காலம் தொட்டு செய்து வருகின்றார்கள். இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் ஆத்மாவிற்க்கு அழிவு இல்லை என்பதை விளக்குவதற்க்காகதான் இது போதும் என்று நினைக்கிறேன். ஏகாபட்டதை எழுதி உங்களை பயப்படவைக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். கூடுதல் தகவல் வேண்டும் என்றால் என்னை தொடர்பு கொண்டு தெரிந்துக்கொள்ளுங்கள்.

முற்பிறவியின் வாசனைகளை தீர்ப்பதற்க்காக ஆத்மா பிறப்பு எடுக்கிறது. அனைத்து வாசனைகளும் இந்த பிறவியிலேயே தீர்ந்துவிடும் என்றால் கண்டிப்பாக கிடையாது. அந்த அந்த கர்மாவிற்க்கு தகுந்தமாதிரி தீரும். இத்தனை வாசனைகளையும் இந்த ஆத்மா அடையும்போது மட்டுமே அது கடவுளின் திருவடியில் சரணடையும்.

கடவுளின் திருவடி

                  கடவுளை நோக்கி உங்களை திருப்பவேண்டும் என்றால் முற்பிறவி வாசனைகளை குறைக்கவேண்டும். அது எப்படி முடியும். முற்பிறவியில் எப்படி இருந்தோம் என்று எனக்கு எப்படி தெரியும் என்று கேட்கலாம். உங்களின் ஜாதகத்தில் ஐந்தாவது வீடு என்று உள்ளது அல்லவா அதனை பார்த்து தெரிந்துக்கொள்ளவேண்டியது தான். 

முற்பிறவியின் வாசனைகளை தீர்த்தால் மட்டுமே அது சாந்தப்படும். அப்படி தீர்க்காமல் சர்க்கரையை கொடுத்தாலும் வாந்தி எடுத்துவிடும் என்பது உண்மை. இன்றைக்கு இருக்கும் நவீன ஆன்மீகம் ஆத்மாவின் வாசனைகளில் தோற்கிறது என்பது மட்டுமே உண்மை. 

நீங்கள் யோகா தியானம் மந்திரம் எதையும் கற்கலாம் ஆத்மாவின் தவிப்பை தீர்த்தால் தான் உங்களுக்கு அனைத்தும் கைகூடும் அப்படி இல்லை என்றால் சமயம் கிடைக்கும் போது அது வெளிப்பட்டுவிடும். நீங்கள் அசிங்கப்பட்டு நிற்பீர்கள். ஆத்மாவின் வாசனைக்கும் ஆன்மீகத்திற்க்கும் போட்டி தான் நடைபெறுகிறது. ஆத்மாவின் வாசனைகளை தீர்க்காத ஆன்மீகம் தோற்று வெட்கப்பட்டு நிற்கிறது என்பது வெளிச்சொல்லப்படாத உண்மை. 

இன்றைக்கு இருக்கும் ஆன்மீகவாதிகள் உங்களின் மனதினை மெஸ்மரிசம் செய்கிறார்களே தவிர உண்மையான ஆன்மீகத்திற்க்கு வழி காட்டவில்லை என்று தான் சொல்லவேண்டும். உங்களை பார்த்து அன்பு குழந்தைகளே என்று பாதி ஆன்மீகவாதிகள் சொல்லுவார்கள் நீங்கள் என்ன செய்வீர்கள் நம்மீது சாமிக்கு இவ்வளவு பாசமா என்று நினைத்து அவருக்கு அடிமையாகிவிடுவீர்கள். நம்ம அம்மா அப்பா கூட இப்படி கூப்பிடவில்லை என்று மனது நினைக்க தோன்றும்.

என்றைக்காவது நமது பெற்றோர்கள் இப்படி கூப்பிட்டு இருக்கிறார்களா கடவுள் தாண்ட இப்படி கூப்பிடுவார் இவர் பூமியில் தோன்றிய கல்கி அவதாரம் டா என்று நீங்கள் நினைத்துக்கொண்டு காலம் பூராவும் இவருக்கு நாம் தொண்டு செய்து நமது கர்மத்தை தொலைக்கவேண்டும் டா என்று சொல்வீர்கள். சாமி அவருடைய கர்மத்தை தொலைக்கவே படாதபாடு பட்டுக்கொண்டு இருக்கிறார் என்று உங்களுக்கு தெரியாது.

ஒரு சாமியரை வைத்து நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் ஓகோ ஆகா என்று சொல்லிக்கொண்டு அவரின் சீடர் என்று பெயரை சொன்னாலே போதும் என்ற நிலை இருந்தது அவரின் கர்மா என்ன செய்தது டிவியில் படம் போட விட்டது.  பின்னாடி போனவர்கள் அனைவரும் என்ன செய்தார்கள் என்பது உங்களுக்கே வெளிச்சம். ஆன்மீகத்தில் கர்மாவின் தாகத்தை தீர்க்காமல் செய்கின்ற எந்த செயலும் முழுமை பெறாது.

இதன் தொடர்ச்சி ஆன்மீக அனுபவங்களில் வரும். மந்திரத்திற்க்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று அதில் தருகிறேன். வழக்கம்போல் பூர்வபுண்ணியம் தொடர் ஐந்தாவது வீட்டை வைத்து சோதிடமாக பதிவு வரும்.

நன்றி நண்பர்களே

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


No comments: