Followers

Thursday, December 27, 2012

நிருவிகற்ப சமாதி



வணக்கம் நண்பர்களே!
                                        மந்திர அனுபவங்கள் பெற ஏகாப்பட்ட நபர்கள் உங்களின் ஜாதகத்தை அனுப்பியுள்ளீர்கள், இது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைத்தையும் நான் பார்த்துவிட்டு பதில் அனுப்புகிறேன். 

நிருவிகற்ப சமாதி என்று யோகாவில் இதனைப்பற்றி சொல்லியிருப்பார்கள் ஆனால் இதனை செய்து இருக்கமாட்டார்கள். ஒரு சில பேர் இதனை செய்து இருக்கலாம். நிறைய சமாதி வகைகள் யோகாவில் இருக்கின்றன. இதில் நிருவிகற்ப சமாதியைப்பற்றி கொஞ்சம் நாம் பார்க்கலாம். 

இது மனமற்ற நிலை இந்த உலகம் என்பது பொய் எல்லாம் மாயை என்று புத்தகங்களில் எழுதிவைத்திருப்பார்கள் இதனை படித்து நாம் என்ன செய்யபோகிறோம். எனக்கு தெரிந்ததை சொல்லபோகிறேன். இந்த நிலையில் உங்களின் உடல் ஒரு செத்தஉடலாக மாறிவிடும். மருத்துவரை அழைத்துவந்து காண்பித்தால் அவர் நாடி எல்லாம் பார்த்துவிட்டு இவர் இறந்துவிட்டார் என்று சொல்லுவார்கள் உயிர் உடம்பில் இருப்பதற்க்கான அடையாளம் அந்த உடலில் சிறிதும் கூட இருக்காது. அவர் நினைத்தால் மட்டுமே மீண்டும் உயிர் அந்த உடலுக்கு வரும். இது மிகப்பெரிய செயல். இதனை நம்மிடம் இருக்கும் புனித ஆத்மாக்கள் செய்வார்கள். என்னுடைய குருநாதரும் இதனை செய்வார். 

நான் என்ன செய்தேன் என்றால் இதனை வைத்து நாம பெரிய ஆளாக மாறிவிடலாம் என்று நினைத்து என் குருவிடம் இதனை நீங்கள் வெளியில் செய்து காட்டுங்கள் என்று கேட்டேன் அப்பொழுது அவர் என்னிடம் கேட்டார் ஏன்டா என்னை வைத்து நீ சம்பாதிக்க பார்க்கிறாயா என்று கேட்டார், என்ன செய்வது எதாவது செய்து பெரிய ஆள் ஆகாவேண்டாமா என்று கேட்டேன். நீ அதனை செய்து காட்டிக்கொள் என்றார். என்னால் இப்பொழுது முடியாது இது எல்லாம் உங்களை போல் சாமியார்கள் செய்வது நான் ஆசாமி இது எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். நான் கேட்டு அவர் எதுவும் இல்லை என்று இதுவரை சொன்னதில்லை அதனால் இதற்கு அவர் சம்மதம் சொல்லுவார். பார்க்கலாம் என்று சொல்லியுள்ளார். 

வரும் 2013 வருடத்தில் இதனை பொதுமக்கள் பார்வையில் நடத்தப்படலாம் என்று நினைக்கிறேன். இப்படி செய்பவர்கள் தினமும் தன் உடல் உழைத்து தான் சாப்பிடுகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் நம்ம ஆட்களாக இருந்தால் என்ன செய்வார்கள் இந்தநேரம் பல ஆயிரம் கோடி பணம்,ஆசிரமம் வைத்திருப்பார்கள்.

இதனை ஏன் உங்களுக்கு சொல்லுகிறேன் என்றால் இந்த மாதிரி புண்ணியஆத்மாக்களின் பார்வையில் உங்களின் மந்திரஅனுபவங்கள் நடைபெறபோகிறது நீங்கள் எவ்வளவு புண்ணியம் செய்து இருந்தால் இவர்களின் ஆத்மா உங்களை கவனிக்கும் என்பதை நினைத்து பாருங்கள். இந்த ஜென்மம் எடுத்தது எவ்வளவு புண்ணியம் என்று உங்களுக்கு அப்பொழுது தெரியும்.

என்னை தேடி இத்தனை பேர்கள் வருகிறார்கள் என்றால் அதற்கு காரணம் குரு தசா எனக்கு நடந்துக்கொண்டு இருக்கின்றது. குரு தசாவில் சனி புத்தி குரு தசா இன்னும் பல வருடங்கள் இருக்கிறது. சனி புத்தி முடியும் தருவாயில் இருக்கின்றது. குரு தசா தான் அனைத்து புண்ணியஆத்மாக்கள் மற்றும் தெய்வ தரிசனம் அனைத்திற்க்கும் காரணம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: