Followers

Saturday, December 22, 2012

ஆன்மீக அனுபவங்கள் 37


வணக்கம் நண்பர்களே !
                                    ஆன்மீக அனுபவங்கள் இந்த பதிவில் ஒரு நல்ல தகவலை பார்க்கலாம்.

ஆன்மீகத்தில் மிக உயர்ந்த இடத்திற்க்கு சென்று அனைவரும் சிவதரிசனம் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். யோகா தியானம் செய்பவர்களும் சிவதரிசனம் கிடைக்கவேண்டும் என்று தான் செய்வார்கள். ஒரு சிலருக்கு இது பயிற்சி இல்லாமல் எளிதில் கிடைக்கும். ஒரு சிலர் கடுமையான பயிற்சி செய்து இதனை பெறுவார்கள்.

சிவதரிசனத்தில் ஆத்மா தரிசனம் மிக உயர்ந்தது அடுத்தது தான் சிவ தரிசனம் கிடைக்கும். இதனை எப்படி செய்ய வேண்டும் என்றால் முதலில் நீங்கள் ஆத்மாக்களை பார்க்க பயிற்சி செய்ய வேண்டும்.

எனக்கு ஒரு நண்பர் இருந்தார் அவர் ஆத்மா தரிசனம் செய்யவேண்டும் என்று பல நாட்கள் பயிற்சி செய்தார் கடைசியில் அவருக்கு ஆத்மா தரிசனம் கிடைத்தது. எப்படி என்றால் ஆத்மாகளை பார்க்க வேண்டும் என்று தினமும் அவர் பூஜையறையில் இருந்து பிராத்தனை செய்தார்.

48 நாட்கள் விரதம் இருக்க வேண்டும். 48 நாட்கள் எந்த வித தவறும் செய்யகூடாது. தினமும் பூஜை செய்ய வேண்டும். பூஜையறையில் நீங்கள் கடவுளிடம் ஆத்மா தரிசனம் வேண்டும் என்று கேட்க வேண்டும். என்னுடைய நண்பருக்கு 48 நாட்களுக்கு பிறகு 10 நாட்கள் சென்ற பிறகு தான் அவருக்கு கிடைத்தது.

ஆத்மாக்களின் தரிசனம் எப்படி இருக்கும் என்று சொன்னால் தானே நீங்கள் அதனை பார்க்கும் போது இது தான் ஆத்மாக்கள் என்று உங்களுக்கு தெரியும். ஒளி வடிவத்தில் காட்சி தரும். சிலருக்கு பகலில் வெறும் கண்களால் பார்க்கமுடியும். இரவிலும் தெரியும்.

எனது நண்பர் பார்த்தது கெட்ட ஆத்மாவை தான் அவர் பார்த்தார் அவர் சொன்னது நான் விரதம் இருக்கும்போது நான் நல்ல ஆத்மாவை பார்க்கவேண்டும் என்று வேண்டுதல் வைக்காமல் இருந்துவிட்டேன் அதனால் எனக்கு கெட்ட ஆத்மாக்களின் தரிசனம் கிடைத்துவிட்டது என்று சொன்னார். நீங்கள் வேண்டும் போது கடவுளிடம் நல்ல ஆத்மாக்களின் தரிசனம் கிடைக்க வேண்டும் என்று வேண்டுங்கள்.

கெட்டஆத்மா என்றால் நீங்கள் படத்தில் காட்டும் உருவம் என்று நினைத்துவிடாதீர்கள். கலராக தெரியும். பச்சை கலர் அல்லது மஞ்சள் கலரின் வண்ணத்தில் தெரியும். தூய வெள்ளை நிறத்தில் தெரியும் ஆத்மாக்கள் நல்ல ஆத்மாக்கள்.

ஒரு சிலருக்கு மனிதர்களை பார்க்கும் போது அவரின் உடலில் இருக்கும் ஆத்மாக்களை பார்க்கவும் முடியும். அந்த ஆத்மா எப்படி இருக்கிறது என்று கூட சொல்லமுடியும். 

திருவண்ணாமலையில் சேஷாத்திரி மகரிஷி ஒரு சில மனிதர்களை பார்க்கும் போது டேய் மலையை போய் சுற்றுடா என்று சொல்லுவாராம். ஏன் என்றால் பாவப்பட்ட ஆத்மா என்று அவரால் பார்க்கமுடிகிறது. மலை சுற்றுவது என்பது கிரிவலம் செல்லுவது என்று அர்த்தம். செவ்வாய்கிழமை மலையை சுற்றுவது முற்பிறவி பாவங்களை எளிதில் கரைக்கும்.  செவ்வாய்கிழமையில் மலையை சுற்றுடா என்று சொல்லுவாராம்.

ஒரு சில மனிதர்கள் தன்னுடைய உடலில் இருக்கும் ஆத்மாக்களை பார்க்கவும் முடியும் அது கூட முற்பிறவியி்ல் எப்படிபட்ட ஆத்மாவாக தனது ஆத்மா இருந்தது என்றும் தெரியும். எப்படி என்றால் ஆத்மா தன்னை மாற்றி மாற்றி காண்பிக்கும். இது உருவம் கிடையாது கலர் லைட் என்று வைத்துக்கொள்ளுங்கள் உண்மையில் இப்படி தான் தெரியவரும். மஞ்சள் மற்றும் பச்சை என்று இரண்டு கலரில் காண்பிக்கும்.  இப்படி காண்பித்தால் ஆகா நமது உடலில் இருப்பவன் முற்பிறவியில் படுமோசமாக இருந்து இருக்கிறான். திருவண்ணாமலை தான் இதற்கு சரியான இடம் என்று கிரிவலம் சென்று உங்களின் கர்மங்களை தீர்த்துக்கொள்ள வேண்டியது தான் வழி.

இவர் சொல்லுவது பொய்யாக இருக்குமோ என்று நீங்கள் நினைத்தால் இந்த பயிற்சியை செய்து பாருங்கள் நான் சொல்லுவது என்ன என்று தெரியவரும்.

என்ன நண்பர்களே மிகப்பெரிய மகான் ஒரு மனிதனை பார்த்து கண்டுபிடிக்கும் வித்தையை உங்களுக்கு சொல்லிக்கொடுத்து இருக்கிறேன். என்ன முயற்சி செய்வீர்களா? 

நீங்கள் நினைப்பது புரிகிறது இது எல்லாம் எதற்கு டா. பணத்தை சம்பாதிப்பதற்க்கு வழியை சொல்லுடா என்றால் ஆத்மாவை பார்க்கலாம் கடவுளை பார்க்கலாம் என்று சொல்லி நேரத்தை வீணடிக்கிறாய் என்று அனைவரும் நினைப்பது புரிகிறது.

முதலில் அனைத்தையும் கற்றுக்கொள்ளுங்கள் பணம் உங்களை தேடிவரும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

No comments: