Followers

Saturday, December 29, 2012

ஆன்மீக அனுபவங்கள் 42



வணக்கம் நண்பர்களே !
                     பூர்வ புண்ணியப்பகுதியில் ஆத்மாவின் தாகத்தைப்பற்றி எழுதினேம். அதனை மந்திர அனுபவங்களோடு சேர்ந்து இப்பதிவுகளில் பார்க்கலாம் 

மந்திர அனுபவங்களை கொடுப்பதற்க்கு நான் உங்களை தேர்ந்தெடுக்கும் போதே உங்களின் ஜாதகத்தை அனுப்ப சொல்லிருந்தேன். நேரிலும் வர சொன்னதும் உங்களை பார்த்து என்ன செய்யலாம் என்று பார்க்க தான். 

மந்திரங்களை கொடுத்து நீங்கள் செய்யும் போது உங்களின் ஆத்மாவின் தாகத்தை தீர்க்கும் முயற்சியில் ஈடுபடும் உங்களின் முற்பிறவி தாகம் நன்றாக இருந்தால் ஒன்றும் பிரச்சினை இல்லை அப்படி இல்லாமல் வில்லங்கமாக இருந்தால் என்ன செய்வது அதற்கு தான் நான் உங்களை கண்காணித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று சொன்னது.

இப்பொழுது என்னை தொடர்புக்கொண்டுள்ள முக்கால்வாசி நண்பர்கள் அனைவரும் பெங்களுரில் வேலை செய்கிறவர்களா இருக்கிறார்கள் அவர்கள் என்னை தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டு இருக்கிறார்கள். எப்படியாவது எங்களுக்கு ஏற்பாடு செய்து தாருங்கள் என்று கேட்கிறார்கள். வாரம் ஒரு முறை சென்னை வருகிறேன் என்று சொல்லுகிறார்கள் .

என்னை பொருத்தவரை செலவு செய்யாமல் இதனை நீங்கள் செய்யவேண்டும் என்று நினைப்பவன். நீங்கள் சென்னை வந்து செல்லும் செலவு அதிகமாகும் அதனை நினைத்தால் எனக்கு கவலை ஏற்படுகிறது.

அவர்களுக்காக ஏற்பாடு மற்றும் நமது வெளியூர் நண்பர்கள் கேட்டுக்கொண்டதால் மாதத்திற்க்கு இரண்டு முறை என்னை வந்து பார்த்தால் போதும் என்று முடிவு எடுத்துக்கொண்டு அதற்க்கான வழிமுறையை செய்துக்கொண்டு இருக்கிறேன். 

நான் முதலில் இதனை அடுத்தவர்களுக்கு கற்றுதரும் என்று நினைக்கும்போது  ஆத்மாவின் தாகத்தை தீர்ப்பதற்க்கு என்ன வழி இருக்கிறது என்று ஆராய்ந்து தான் செய்தேன். 

இந்த மந்திரங்களை நீங்கள் செய்யும் போது உங்களுக்கு நன்றாக தூக்கத்தை கொடுத்துவிடும். நன்றாக தூங்கலாம். இதனை ஏன் செய்தேன் என்றால் பல வழிகளிலும் தாகம் ஏற்பட்டு வந்த ஆத்மாவிற்க்கு நன்றாக ஒய்வுக்கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி இதனை செய்து இருக்கிறேன். நன்றாக ஒய்வுக்கு பிறகு தான் அனைத்தும் கிடைக்கும் படி செய்து இருக்கிறோம். இதற்கு மேல் இதன் ரகசியங்களை அனுபவத்தில் உணர்ந்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

கர்மத்தை தொலைப்பதற்க்கான வழிகளை இதில் செய்து இருக்கிறேன் அதனால் தான் என்னவோ இதனை கற்கவருபவர்களுக்கு ஏகாபட்ட தடங்கல் ஏற்படுகின்றன.  நான் முதலில் கொடுக்கநினைத்தவர் இன்று வரை செய்யமுடியவில்லை என்றால் பாருங்கள்.

நான் முதலில் அனைவரிடமும் சொன்னது அனைத்தையும் கற்றுவிட்டு எதுவும் நடைபெறவில்லை என்றால் வாருங்கள் என்று சொல்லிருந்தேன். 

கர்மத்தை தொலைத்துவிட்டால் நாம் சாமியார் ஆகிவிடுவோம் என்று கவலைக்கொள்ள தேவையில்லை இதனை செய்து கொண்டு இல்லறத்தில் இருக்கலாம். அனைத்து கர்மமும் தொலையாது. எந்த கட்டுப்பாடும் இதற்கு கிடையாது. 

எனக்கும் எனது குருநாதருக்கும் சிறு வேறுபாடு உள்ளது அவர் எதனையும் அவ்வளவு எளிதில் கற்றுதரமாட்டார். ஏன் என்று கேட்டால் யார் யாருக்கு என்ன கிடைக்கும் என்று விதி இருக்கிறதோ அவன் என்னை தேடி வருவான் டா என்பார். அவ்வளவு எளிதில் அவரிடம் இருப்பதை சொல்லமாட்டார். அவர் மந்திரத்தை கொடுத்து 108 நாட்கள் வரை நன்றாக சோதிப்பார். அந்த 108 நாட்கள் அவர்கள் ஒழங்காக செய்துவிட்டால் அதன் பிறகு அனைத்தையும் கற்றுகொடுப்பார். யாரையும் இதனை கற்றுக்கொள்ளுங்கள் என்று கேட்கமாட்டார்.

நான் யாரையாவது பார்த்தால் இதனைப்பற்றி சொல்லி இதனை நீங்கள் செய்யுங்கள் என்று சொல்லுவேன். அவர்களை கடைசி வரை விடாமல் இதனை செய் அப்படி என்று என்னால் முடிந்தளவுக்கு கீழ் இறங்கி சொல்லுவேன். அவர்கள் என்னை திட்டினாலும் பரவாயில்லை என்று விடாமல் சொல்லுவேன்.  ஏன் அப்படி செய்கிறேன் என்றால் அடுத்தவரைப்பற்றி அதிகம் தெரிவதால் இதனை சொல்லுகிறேன். உங்களின் கர்மா இதனை தடுக்கும் நீங்கள் மீறி வரவேண்டும். 

உங்களுக்கு குரு நான் கிடையாது நான் உங்களையும் உங்கள் குருநாதரையும் இணைக்கிறேன் அதனை தவிர எனக்கு ஒன்றும் கிடையாது. நீங்கள் ஏன் என்னை வந்து பார்க்கவேண்டும் என்றால் நான் அறிமுகப்படுத்தும் நபர் அனைவரும் சாமியார்கள் நீங்கள் ஒரே ஈர்ப்பு ஏற்பட்டு நீங்கள் சந்நியாசியாக மாறிவிடகூடாது என்பதால் என்னை சந்தியுங்கள் என்று சொல்லுகிறேன். 

நீங்கள் சந்நியாசியாக மாறுவதற்க்கு விருப்பம் இருந்தால் மூன்றே நாட்களில் உங்களை சந்நியாசியாக மாற்றிவிடுவார்கள். எனக்கு தெரிந்து நிறைய பெண்கள் சந்நியாசி தீட்சை பெற்று இருக்கிறார்கள்.

சந்நியாசியாக மாறாமல் அனைத்தையும் கற்று அனுபத்தை உணரவேண்டும் என்றால் என்னுடன் சென்னையில் இருந்துவிடவேண்டியது உங்களின் வேலை. நான் அறிந்து வைத்திருக்கும் அனுபவங்கள் கொஞ்சம் அல்ல என்னுடன் பத்து வருடங்கள் இருந்தாலும் கற்றுக்கொள்ளமுடியாத அளவுக்கு இருக்கிறது. பெருமையாக சொல்லிக்கொள்ளவில்லை நீங்கள் ஆவலுடன் வந்து தெரிந்துகொள்வீர்கள் என்பதால் சொல்லிக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.




1 comment:

Saravanakumar.B said...

today only i seen your blog...
i m going on reading your old posts..
thanks for sharing...

Regards,
Saravanakumar.B
http://spiritualcbe.blogspot.in/