Followers

Saturday, December 15, 2012

மிகப்பெரிய பாவம் எது?



வணக்கம் நண்பர்களே! 
                                           பாவங்களில் மிகப்பெரிய பாவம் என்ன என்று இப்பதிவில் பார்க்கலாம். நாம் ஜாதகத்தை எடுத்தாலே என்ன செய்வோம் கடந்த ஜென்மத்தில் நிறைய பாவங்கள் செய்து இருக்கிறீர்கள் அதனால் இந்த ஜென்மத்தில் கஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று சொல்லுகிறோம். இது தெரிந்து சொல்லுகிறோமா என்றால் கண்டிப்பாக இருக்காது. 

பாவங்களில் மிகப்பெரிய பாவம் என்பது பெண்ணின் வயிற்றில் இருக்கும் கருவை கலைப்பது தான். ஒரு பெண்ணின் வயிற்றில் இருக்கும் கருவை கலைத்தால் அது மிகப்பெரிய தோஷத்தை ஏற்படுத்தும். அவ்வாறு கலைக்கும் குடும்பத்தையே அது சீரழித்துவிடும். ஒரு குழந்தை என்பது கடவுள் கொடுத்த வரம். அதனை கலைப்பது என்பது கடவுளுக்கு நீங்கள் செய்யும் தீங்கு போன்றது தான்.

என்னிடம் சோதிடம் பார்க்க ஒரு வாடிக்கையாளர் வந்தார் அவருக்கு குழந்தை இல்லை. திருமணம் முடிந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அவரின் ஜாதகத்தில் குழந்தை பாக்கியம் இருப்பதற்க்கான சூழ்நிலை உள்ளது அவரிடமே நான் கேட்டேன் உங்களுக்கு குழந்தை பாக்கியம் இருக்கிறது இத்தனை வருடங்களில் உங்களுக்கு இரண்டு குழந்தை இருக்கவேண்டுமே என்று கேட்டேன். அவர் உண்மையை ஒத்துக்கொண்டார்.

எனக்கு இரண்டு குழந்தைகள் உருவாகின ஆனால் நாங்கள் தான் அதனை கலைத்துவிட்டோம் என்று சொன்னார். ஏன் அவ்வாறு செய்தீர்கள் என்று கேட்டேன். நாங்கள் இளம்வயதில் திருமணம் செய்துக்கொண்டோம் எங்கள் திருமணம் காதல் திருமணம் இருவரின் வீட்டிலும் எதிர்ப்பு இருந்து வந்தது. நாங்கள் தனியாக வசித்து வந்தோம் அதனால் கொஞ்ச காலம் சென்றவுடன் குழந்தைளை பெற்றுக்கொள்ளலாம் என்று கலைத்தோம் என்று சொன்னார்.

இப்பொழுது குழந்தை வேண்டும் நினைத்தோம் ஆனால் குழந்தை பாக்கியம் ஏற்படவில்லை பல வருடங்களாக அனைத்து மருத்துவரையும் பார்த்துவிட்டோம் அதனால் ஒன்றும் பயன் இல்லை என்றார்.

குழந்தை பாக்கியம் என்பது எத்தனையோ மருத்துவர் பார்த்து மருந்து கொடுத்தாலும் ஆண்டவன் நினைத்தால் தான் அது முடியும். உங்களுக்கு இரண்டு குழந்தைகளை கொடுத்த ஆண்டவன் இப்பொழுது கொடுக்கவில்லை என்றால் அதனை கலைத்தது தான். 

நாம் குழந்தைகள் இருக்கிறதா அல்லது இல்லையா என்று பார்க்க ஐந்தாவது வீட்டை வைத்து பார்ப்போம் ஐந்தில் ராகு கேதுகள் இருந்தால் இந்த மாதிரி நடைபெறும். ஐந்தாம் வீட்டில் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால் பித்ரு தோஷம் என்போம். நமக்கு பிறக்கும் குழந்தை நமது தாத்தாவோ அல்லது பாட்டியோ கூட வந்து பிறக்க வாய்ப்பு உள்ளது அதனை வயிற்றிலேயே கொன்றால் அவர்களின் சாபத்தை நாம் அனுபவிக்கத்தான் வேண்டும். இது தான் மனிதர்களுக்கு ஏற்படும் பாவத்திலேயே மிகப்பெரியது.

ராகு கேதுக்களை எளிதில் மதிப்பிடமுடியாது. ஜாதகத்தில் நிழல் கிரகம் என்று சொல்லக்கூடிய ராகு கேதுக்கள் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுத்தும். நமது சந்ததிகளை உருவாக்குவதில் முக்கியபங்கு வகிக்கிறது. நமது உடலில் முதுகில் பல சக்கரங்கள் இருக்கின்றன என்று உங்களுக்கு தெரியும். இது எல்லாம் பாம்பு போல் பி்ண்ணியுள்ளன என்றும் தெரியும். மூலதார  சக்கரத்தில் பிரச்சினை என்றால் உங்களுக்கு குழந்தை பாக்கியம் உருவாகும் சூழ்நிலை கிடையாது. இந்த சக்கரத்தில் பிரச்சினை உருவாக்குவதில் முக்கியபங்கு ராகு கேதுகள் மூலம் நடைபெறுகிறது.

ராகு கேதுக்கள் சரியாக இருந்தால் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கி்டைக்கும். கருகலைப்பை மட்டும் செய்யாதீர்கள். உங்களின் சந்ததியை அழிக்காதீர்கள் கருகலைப்புக்கு பாவத்திற்க்கு பரிகாரம் கிடையாது. பாவங்களில் மிகப்பெரிய பாவத்தை இதற்கு பிறகாவது செய்யாதீர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

3 comments:

Unknown said...

yes sir...most of the pepople are do this mistake..such a lot of people affected this mistake..pls a lot of good message will come from u... C.R

rajeshsubbu said...

//* C Rama Chandran said...
yes sir...most of the pepople are do this mistake..such a lot of people affected this mistake..pls a lot of good message will come from u... C.R *//
வணக்கம் நண்பரே கண்டிப்பாக எழுதுகிறேன்

KJ said...

Very useful post sir. Thanks.