Followers

Friday, December 28, 2012

பூர்வபுண்ணியம் 3



வணக்கம் நண்பர்களே !
                                         இப்பதிவில் பூர்வ புண்ணியம் மற்றும் ஆன்மீக அனுபவங்கள் சேர்ந்து கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது அதனால் அனைவரும் இப்பதிவை படித்துவிடுங்கள். 

நான் ஆன்மீக அனுபவங்களை எழுதியவுடன் அதில் இருந்து பல நண்பர்கள் என்னிடம் தொடர்பு கொண்டு ஆன்மீக அனுபவங்களை பெறுவதற்க்கு கேட்டு வருகிறார்கள். அவர்களை சந்திப்பதாகவும் சொல்லியுள்ளேன். இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டவுடன் பல பேர் வெளியூரில் இருந்து தொடர்புக்கொண்டு என்னிடம் கேட்டார்கள். ஏன் நீங்கள் பாரபட்சம் காட்டுகிறீர்கள் எங்களையும் சந்தியுங்கள் என்று கேட்டார்கள். அனைவரையும் சந்திக்கலாம் எனக்கு ஒன்றும் பெரிய கஷ்டம் ஒன்றும் கிடையாது.

நீங்கள் சென்னை வருவதற்க்கு செலவுகள் ஆகும் அப்படி செலவு செய்து என்னை பார்த்து உங்களுக்கு கொடுக்கவில்லை என்றால் உங்களின் மனம் எவ்வளவு கஷ்டப்படும் என்பதை நான் அறிவேன் அதனால் உங்களின் ஊர் பக்கம் வரும்போது என்னை சந்திக்கலாம் என்று நினைக்கிறேன். என்னை சந்திப்பவர்களுக்கு எப்படியாவது ஒரு வழியை ஏற்படுத்தி தருகிறேன் என்ன கொஞ்ச காலம் ஆகும். யாரையும் ஏமாற்றுவது எனக்கு பிடிக்காது.

எனது பார்வையில் நீங்கள் இருக்கவேண்டும் என்று ஏன் சொல்லுகிறேன் என்றால் உங்களின் உடலில் பலபிறவியில் ஏற்பட்ட அனுபவங்கள் சேர்த்து வைத்திருக்கிறது உங்களின் ஆத்மா இந்த பிறவியில் ஏற்பட்ட அனுபவங்களும் சேர்ந்து இருக்கிறது. இதை ஆன்மீகத்தில் இருப்பவர்களை கேட்டால் சரியாக சொல்லுவார்கள்.

இதை நீங்களே பார்க்கலாம் எப்படி என்றால் உங்களுக்கும் உங்கள் சகோதர்களுக்கும் எந்த நேரமும் சண்டை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அல்லது உங்களின் தந்தையுடன் சண்டை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும் எந்த வித காரணமும் இருக்காது. சிலருக்கு அம்மாவை கண்டால் பிடிக்கவே பிடிக்காது. சம்பந்தமே இல்லாமல் ஒரே பயமாக இருக்கும். எதற்காக பயப்படுகிறோம் என்று தெரியாது. 

ஒரு சிலருக்கு அடுத்தவர்களை கண்டால் ஏதாவது ஒரு சண்டையாது போட வேண்டும் என்று எண்ணம் ஏற்படும் அவர்களுக்கும் இவர்களுக்கும் சம்பந்தமே இருக்காது.  சிலருக்கு தன் மனைவியை பார்த்தால் பிடிக்கவே பிடிக்காது. ஒரு சிலரை பார்த்தால் அவ்வளவு அழகாக இருப்பான் அவன் அழகே இல்லாத ஒரு பெண்ணை விரும்பிக்கொண்டு இருப்பான். இப்படி பலவிதம் இருக்கிறது. இதற்கு காரணம் என்ன என்று பார்த்தால் ஒன்றும் இருக்காது பின்பு எப்படி இது எல்லாம் நடக்கிறது என்று பார்த்தால் முன்பிறவி ஏற்பட்ட அனுபவங்கள் இப்பிறவியில் ஏற்படுகிறது. நீங்கள் முன்பிறவியில் ஒருவரை காதலித்து தோற்றால் அவரை இப்பிறவியிலும் உங்கள் ஆத்மா தேடுகிறது. 

ஒவ்வொரு ஆத்மாவிலும் பலவித ஏக்கங்கள், ஏமாற்றங்கள், வெறுப்புகள், வெறிகள் இருக்கின்றன. இது அனைத்தும் உங்களிடம் சேமித்து வைத்திருக்கிறது.  இதனை சமயம் வரும்போது அது வெளிப்படும். நீங்கள் முற்பிறவியில் பணத்திற்க்காக ஆசைபட்டுக்கொண்டு கடைசிவரை அது கிடைக்கவில்லை என்றால் நீங்கள் இப்பிறவியில் பணத்தின் மீது வெறியாக இருப்பீர்கள். நீங்கள் முற்பிறவியில் கொலை செய்ப்பட்டு இறந்தால் அவரை பழிவாங்க இப்பிறவியிலும் உங்கள் எண்ணம் துடிக்கசெய்யும். அவரைப்பற்றி உங்களின் அறிவுக்கு தெரியாது ஆனால் பலி வாங்கவேண்டும் என்ற எண்ணம் அவரை பார்க்கும்போது ஏற்படும்.

என்னிடம் வரும் நபர்கள் சொல்லுவார்கள் நான் தவறு செய்துவிட்டேன். என்னை கடவுள் மன்னிப்பாரா நான் இதற்கு தகுதியானவான என்று கேட்பார்கள். நீ ஏங்கே தவறு செய்தாய் உன்னை ஆட்டிவைப்பவன் தானே அவ்வாறு செய்யவைத்தான் என்று நினைத்து பரவாயில்லை நீ தகுதியானவன் தான் என்று சொல்லுவேன்.

இப்பொழுது உள்ள இளைஞர்கள் தவறு ஏதாவது செய்துவிட்டு அதனைப்பற்றி கவலை அடைகிறார்கள். என்னை தொடர்பு கொள்ளும் பெண்களும் இப்படி தான் சொல்லுகிறார்கள் நான் தவறு செய்துவிட்டேன் நான் ஆன்மீகத்தில் ஈடுபடமுடியுமா என் மனசாட்சி உறுத்துகிறது என்று சொல்லுவார்கள்.

நான் ஒன்று சொல்லுகிறேன் கடவுள் உங்களை காப்பதற்க்கு அண்ணனாக வருவான். தம்பியாக வருவான் சகோதரியாக வருவான் தந்தையாக வருவான் தாயாக வருவான் உங்களின் துணைவராக வருவான் ஏன் உலகில் உள்ள அனைத்து பொருளாக வருவான் ஆனால் உங்களை அழிப்பதற்க்கு கடவுள் எடுக்கும் ஒரே அவதாரம் மனசாட்சியாக வருவான். மனசாட்சி மட்டுமே உங்களை அழிக்கும். இந்த அவதாரத்தில் இருந்து ஒருவனும் தப்பிக்கமுடியாது. 

கண்டிப்பாக நீங்கள் தவறு செய்யவில்லை உங்களை ஒரு கருவியாக பயன்படுத்தபட்டுவிட்டது என்பது தான் உண்மை. உங்களின் உடலை ஒரு கருவியாக பயன்படுத்தி செய்துவிட்டது உங்களின் ஆத்மா. ஆத்மாவை யார் இயக்கினார்கள் அதற்கு இதனை செய்ய சொன்னவர் யார் என்று பார்த்தால் நாம சோதிடத்தை படித்துக்கொண்டு இருக்கிறோமே அந்த கிரகங்கள் தான் இயக்கியது. 

நமது மனசாட்சியை தூண்டிவிடுவதில் முக்கியபங்கு கிரகங்களை சாரும். மனக்காரகன் சந்திரனை அனைத்து கிரகங்களும் தூண்டிவிடும் அப்படி தூண்டும்போது உங்களுக்கு உங்களை அறியாமலே அந்த செயலை செய்ய ஆரம்பிப்பீர்கள். இப்படி தான் நீங்கள் மாட்டிக்கொள்ளுவது சந்திரனை தூண்டிவிடுவதில் சனி, ராகு, கேது மூன்றாம் வீட்டு அதிபதி, ஆறாம் வீட்டு அதிபதி, எட்டாம் வீட்டு அதிபதி மற்றும் பனிரெண்டாம் வீட்டு அதிபதிகள் செய்வார்கள் இவர்கள் அனைவரும் கெடுதல் செயலை செய்ய சொல்லுபவர்கள் நல்ல செயலை மீதம் உள்ள கிரகங்கள் மற்றும் வீடுகள் செய்யும்.

உங்களின் ஆத்மாவில் உள்ள வாசனைகளை தூண்ட செய்வது தான் இந்த கிரகங்களின் முக்கிய பங்கு. நீங்கள் எப்பேர்பட்ட தவறு செய்தாலும் என்னை பொறுத்தவரை அது தவறு இல்லை என்று தான் சொல்லுவேன். சட்டங்களுக்கு அந்த செயல் தவறாக தெரியலாம். ஆனால் மனிதன் செய்வது அந்த ஆத்மாவின் ஏக்கத்தை தீர்த்தது அவ்வளவு தான். மது விற்பது தவறு என்று அரசாங்கம் சொல்லியது அதையே அரசாங்கம் செய்தால் தவறு இல்லை என்று ஆகிவிட்டது. தவறை பார்க்கும் விதத்தில் தான் இருக்கிறது. நாம் ஆடையுடன் திரிகிறோம். காட்டுவாசி ஆடையில்லாமல் திரிகிறார்கள் .அவர்கள் நம்மை பார்க்கும் போது அவர்களின் கண்களுக்கு நாம் தவறு செய்கிறார்கள் என்று தான் தெரியும். 

இதற்கும் மந்திரஅனுபவங்களை பெறுவதற்க்கும் என்ன தொடர்பு?

பொறுமை தேவை அடுத்த பதிவில் எழுதுகிறேன். ஆவலுடன் இருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.



2 comments:

அருட்சிவஞான சித்தர் said...

வணக்கம்,
தங்களின் பூர்வு புண்ணியம் தொடர்களை படித்து வருகின்றேன்.
பூர்வ புண்ணிய பயன்கள் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் உண்டு. அது நன்மையாயினும் சரி தீமையாயினும். சரி.
நிற்க,
தாங்கள் பல்வேறு வகையான, சரியான விளக்கங்களை வாசகர்களுக்கு புரியும் வண்ணம் சொல்லியுள்ளீர்கள். அதற்காக தங்களை வாழ்த்துகின்றேன். உண்மையை யார் சொன்னாலும் உண்மைதான். தாங்கள் உண்மையையே சொல்லியுள்ளீர்கள். ஆன்மீகம் என்ற போர்வையில் சிலர் தனக்கு தெரிந்த விஷயத்தை மிகைப்படுத்தி கூறி வருகின்றனர். தாங்கள் அப்படி அல்ல என்பது தங்களின் கட்டுரையிலிருந்து தெரிய வருகிறது.

வாழ்க தாங்கள் பல்லாண்டு.
வளர்க இறை அருள் கற்பக விருட்சமாய்.

என்றும் நட்புடன்,
பா.முருகையன், வடலூர்.

//இதற்கும் மந்திரஅனுபவங்களை பெறுவதற்க்கும் என்ன தொடர்பு?//
என்ன தொடர்பு என தாங்கள் கூற வருவதை எதிர்பார்க்கின்றேன்.

rajeshsubbu said...

வருக அருட்சிவஞான சித்தர்
வணக்கம் தங்களின் கருத்துக்கு நன்றி. கண்டிப்பாக நிறைய எழுதுகிறேன்.