Followers

Wednesday, October 21, 2015

தான தர்மம்


ணக்கம்!
          ஒரு புத்தகத்தை படித்தபொழுது அதில் உள்ள ஒரு கதையை உங்களுக்கு தரவேண்டும் என்று நினைத்தேன். அதனை சொல்லவும் அதற்கு ஒரு சந்தர்ப்பம் இன்று அமைந்தது.

ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் பிறர்க்கு எந்த வித தான தர்மம் செய்யாமல் இருந்தான். அவனின் கனவில் மகாலட்சுமி கனவில் தோன்றி உன் முன்னோர்கள் செய்த புண்ணியத்தால் இன்று வரை செல்வந்தனாக இருந்துவந்தாய். நீ பிறர்க்கு தான தர்மம் செய்யவில்லை. நாளை உன்னை விட்டு சென்றுவிடுவேன். கடைசியாக உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள் என்றது. 

மகாலட்சுமியிடம் பொன்னும் பொருளும் வேண்டும் என்று கேட்டான். மகாலட்சமியும் அவனுக்கு கொடுத்தது. அடுத்த நாள் மகாலட்சுமி அந்த வீட்டை விட்டு சென்றவுடன். பொன்னும் பொருளும் அவனை விட்டு சென்றது.

உங்களின் முன்னோர்கள் செய்த புண்ணியம் தான் உங்களுக்கு செல்வவளம் கிடைக்கிறது. அந்த புண்ணியம் கடைசி வரை தொடரவேண்டும் அதே நேரத்தில் உங்களின் வாரிசுயும் நன்றாக இருக்கவேண்டும் என்றால் நீங்களும் தொடர்ச்சியாக தான தர்மத்தை செய்து வரவேண்டும்.

ஒன்பதாவது வீடு என்ற பாக்கியஸ்தானம் நன்றாக வேலை செய்யவேண்டும் என்றால் தொடர்ச்சியாக நீங்கள் தான தர்மத்தை செய்து வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

spalaniappan said...

நம் வருமானத்தில் ஒரு பகுதியை தானம், தர்மம் செய்யவேண்டும் என்பது சரியானது .தரித்திர நிலை நீங்கி தன வரவு எப்பொழுதும் இல்லத்தில் நிலைபெற திரு ஞான சம்மந்தர் பதிகம் 40 நாட்கள் தொடர்ந்து படித்தால் பணம் வந்து பையை நிரப்பும் . இதை அனுபத்தில் உணர்தவர்கள் . சொல்லும் உண்மை .
தன வரவு கிடைக்க பதிகம் / ஸ்லோகங்கள் உள்ளது .அதை தொடர்ந்து கடைபிடிப்போர் வாழ்வில் வளம் பெற்று நலமுடன் இருக்கிறார்கள் .