Followers

Thursday, December 1, 2016

இராகு கேது பரிகாரம் பகுதி 3


வணக்கம்!
          ராகு இரண்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டால் எப்படி பலன் கிடைக்கும் என்பதைப்பற்றி பார்க்கலாம். ராகு இரண்டாவது வீட்டில் இருந்தால் வாயில் இருந்து பேசும் வார்த்தை பிறர்க்கு தொந்தரவு அளிக்கும். பேசும் வார்த்தையில் நஞ்சு இருக்கும்.

ஒரு சிலர் பேசுவதால் பிரச்சினையில் மாட்டிக்கொள்வார்கள். உங்களுக்கு இரண்டில் ராகு இருந்து பெண்களிடம் பேசும்பொழுது அதிக கவனத்தோடு இருக்கவேண்டும். வில்லங்க வார்த்தை வந்து பெண்களிடம் அடிவாங்கும் நிலையும் ஏற்படும்.

இரண்டாவது வீடு உங்களின் வீட்டில் உள்ள வாரிசுகளை குறிக்கும். ஐந்தாவது வீடு தானே வாரிசு என்று கேட்கலாம். உங்களின் குடும்ப உறுப்பினரைப்பற்றி குறிப்பிடும் இடம் அதனால் அப்படி சொன்னேன். இன்றைய காலத்தில் திருமணம் முடிந்தவுடன் அவர்கள் தனிக்குடிதனம் சென்றுவிடுகிறார் அல்லவா அப்பொழுது அந்த இடம் அவர்களின் வாரிசை குறிக்கும் இடம். இந்த இடத்தில் ராகு இருந்தால் அவர்களின் வாரிசுகள் ரவுடியாக இருந்தால் பெயர் எடுக்கலாம். ஒரு சிலர் வீணாகவும் போய் இருக்கிறார்கள். ஒரு சிலர் அரசியல் குடும்ப பின்னணி இருக்கின்றது.

இரண்டாவது வீட்டில் ராகு இருக்கும்பொழுது அவர்களுக்கு பணவரவு பெரும்பாலும் சட்டவிரோதமாக இருக்கும். ஒரு சிலர் நல்லபடியாகவும் சம்பாதிக்கிறார்கள். ஒரு சிலருக்கு பணம் வரவே வராது. வங்கியில் இருக்கும் பணநிலைமையை காட்டக்கூடிய ஒரு இடம். இந்த இடத்தில் இருந்தால் உங்களின் வங்கியில் இருக்கும் பணம் களவும் போகும். நெட்டில் இருந்து திருடிவிடுகிறார்கள் என்று சொல்லுகிறார்கள் அல்லவா அது எல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக பணவரவு நன்றாக இருக்கும்.

தற்பொழுது இந்தியாவிற்க்கு இந்த இரண்டாம் இடம் பிரச்சினை இருக்கின்றது என்று நினைக்கிறேன். எல்லாேரும் வங்கி வாசலில் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு சிலருக்கு திடிர் அதிர்ஷ்டம் போல யாருக்கோ போடவேண்டிய பணத்தை உங்களின் வங்கிகணக்கில் வந்துவிழும். அனைவரும் இந்த பலனை எதிர்பார்க்கவேண்டாம் ஒரு சிலருக்கு நடக்கும்.

மேலும் தொடரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: