Followers

Thursday, December 1, 2016

அம்மன் பூஜை


வணக்கம்!
          அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தலாம். முதல் தேதியில் இந்த அறிவிப்பை வெளியிட்டதற்க்கு காரணம் எங்கள் பகுதியில் உள்ள வங்கியில் ஒரு நாளைக்கு இரண்டாயிரம் அல்லது ஆயிரத்து ஐநூறு ரூபாய் தான் கொடுக்கிறார்கள். 

ஒரு சில நாட்களில் வங்கியில் பணம் இல்லை என்று சொல்லுகின்றனர். ஏடிம் வாசலில் கியூவில் நின்ற காரணத்தால் தான் பதிவு எழுதுவது கூட குறைந்தது என்று சொல்லலாம். நம் தொழில் கூட இந்த நேரத்தில் கொஞ்சம் பாதிப்பு இருந்தது.

பொதுவாக எனக்கு எந்த நேரமும் எப்படியும் வாடிக்கையாளர்கள் வந்துக்கொண்டே இருப்பார்கள். பணம் செல்லாது என்று அறிவித்தவுடன் குறைந்தது ஒரு வாரத்திற்க்கு ஒருவர் கூட வரவில்லை அதன் பிறகு தற்பொழுது சீராகிவிட்டது. மக்களை அந்தளவுக்கு பாதித்து இருக்கின்றது. ராகு கேது பரிகாரம் கூட இந்த காரணத்தால் தான் கொஞ்ச தள்ளிவைத்து ஜாதகத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு சார் உங்களுக்கு பாதிப்பு அதிகம் இருக்கும் என்று கேட்டார்கள். என்னை அந்தளவுக்கு பார்க்கும் உங்களுக்கு நன்றி. என்னுடைய பெயரில் இந்த ஜாதககதம்பம் மட்டும் தான் உள்ளது. ஜாதககதம்பத்திற்க்கு வரும் பணம் எல்லாம் முறையான வரி அரசாங்கத்திற்க்கு செலுத்தப்படுகிறது. 

நமது பகுதியில் உள்ள வங்கிகளில் பணம் குறைவாக கொடுப்பதால் இந்த அறிவிப்பை இன்றே வெளியிடுகிறேன். அம்மன் பூஜைக்கு பணம் அனுப்புவர்கள் தற்பொழுதே அனுப்பிவிடுங்கள். பணத்தை எடுப்பதற்க்கு வசதியாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: