Followers

Sunday, December 4, 2016

எமன்


ணக்கம்!
          இறைவன் எமனிடம் எல்லாேரும் உன்னை கண்டு பயப்படுகிறார்கள் ஏன் இப்படி செய்கிறாய் என்று எமனிடம் கேட்டாராம். பலி உன்மேல் விழுகிறதே அது ஏன் உனக்கு என்று கேட்டாராம். எமன் இறைவனிடம் நீங்கள் பூலோகத்திற்க்கு சென்று தண்ணீர் தூக்கிக்கொண்டிருக்கும் பெண்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று பார்த்து வாருங்கள் என்றாராம்.

இறைவன் பூலோகத்திற்க்கு வந்து பார்த்திருக்கிறார். தண்ணீர் தூக்கும் இடத்தில் பார்த்தால் பெண்கள் அந்த நோயால் அவர் இறந்தார் இந்த நோயால் அவர் இறந்தார் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். எமனால் இறந்தார் என்று ஒருவரும் சொல்லவில்லை. 

பலி முழுவதும் நோய்க்கு தான் சென்று இருக்கிறது எமனுக்கு செல்லவில்லை. உங்களுக்கு எமனின் அழைப்பு வந்தால் மனிதன் சென்று தான் ஆகவேண்டும். நாேய் மீது நாம் பலி போட்டுக்கொண்டு இருப்போம். 

ஒரு சிலருக்கு நோய் வந்தால் உடனே சம்பந்தப்பட்ட கிரகத்திற்க்கு பரிகாரம் செய்வார்கள். கண்டிப்பாக செய்து தான் ஆகவேண்டும் அதோடு எமனுக்கும் நாம் பரிகாரம் செய்யவேண்டும். எமன் கோவில் இருக்கும் இடத்திற்க்கு சென்று சம்பந்தப்பட்டவர்களுக்கு வேண்டுதல் வைக்கவேண்டும்.

ஒரு சிலருக்கு நோய் வருவதுபோல் இருக்கும் உடனே இறந்துவிடுவார்கள் அதனால் கிரகத்திற்க்கும் பரிகாரம் செய்யவேண்டும் எமன் வந்து பிடிக்கவேண்டாம் என்று வேண்டுதலை எமன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: