Followers

Thursday, December 29, 2016

பரிகாரம்


ணக்கம்!
          ஒரு வழியாக இராகு கேது பரிகாரம் முடிந்தவிட்டது. நிறைய கஷ்டங்களுக்கு நடுவே இந்த பரிகாரத்தில் கலந்துக்கொண்ட அன்பர்கள் அனைவருக்கும் அம்மன் அருளால் நல்லது நடக்கும். ஒரு மனகுறை மட்டும் மனதில் இருந்துவருகின்றது. நமது அம்மன் பூஜை போல் இதனை வெளியில் படங்களை போடமுடியவில்லை. 

ஆன்மீக அனுபவங்கள் படிக்கும் நண்பர்களுக்கு மட்டும் பரிகாரம் முடிந்து அம்மன் ஹோமத்தின் படங்களை வாட்ஸ் அப்பில் பகிர்ந்துக்கொள்ளமுடிந்தது. மற்றவர்களுக்கு அப்படி செய்யமுடியவில்லை என்ற ஒரு வருத்தம் இருந்தது. பரிகாரம் பூஜையை வெளியில் காட்டகூடாது. பரிகாரம் முடிந்து அம்மனை வைத்து ஒரு ஹோமம் செய்வோம் அதனை பகிர்ந்துக்கொள்ளமுடியும்.

இராகு கேது பரிகாரத்தில் கஷ்டத்தோடு தான் கலந்துக்கொண்டு இருப்பார்கள். ஏன் என்றால் நாட்டில் நிலவும் பணப்பிரச்சினை தான் காரணம் என்று சொல்லமுடியும். பாதி பேர்கள் தங்களின் ஜாதகத்தை அனுப்பிவிட்டு பணம் அனுப்பமுடியவில்லை அப்படி இருந்தும் அவர்களுக்கு பரிகாரம் செய்திருக்கிறேன். நாட்டிலேயே பணம் இல்லை என்று சொல்லுகின்றனர் சாதாரண மனிதனிடம் எப்படி இருக்கும் என்பதால் விட்டுவிட்டேன். 

ஒரு சில நண்பர்கள் கொஞ்சம் தாராளமாகவே பணத்தை அனுப்பியிருந்தார்கள் அதனை வைத்து பலருக்கு செய்யமுடிந்தது. வரும் செவ்வாய் மற்றும் சனி பரிகாரத்திற்க்கு கூட இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

செவ்வாய் மற்றும் சனி பரிகாரம் முற்றிலும் இலவசமாக நடத்தலாம் அதோடு விருப்பட்டு பணம் அனுப்புவதும் செய்யலாம் என்று இருக்கிறேன். இலவசம் இன்னமும் அறிவிக்கவில்லை அதற்கு ஏற்பாடு செய்துக்கொண்டு இருக்கிறேன். அதற்குண்டான பணம் வந்தவுடன் இலவச அறிவிப்பு வரும். உங்களின் ஜாதகத்தை எல்லாம் எடுத்து தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: