Followers

Saturday, December 24, 2016

தீயகிரங்களின் பிடியின் காலம்


வணக்கம்!
          ஏழரை சனி காலத்தில் நாம் நன்றாக இல்லாமல் ஏழைப்போல் இருந்தால் நாம் ஏழரையின் பாதிப்பில் இருந்து விடுபடலாமா என்று நண்பர் கேள்வி கேட்டார்.

பொதுவாக ஒரு பூஜை கொடுக்கும் சக்தி நம்மை மாற்றிக்கொள்வதால் எளிதில் நடைபெறுவதில்லை என்பது தான் உண்மை. பரிகார பூஜையை நான் அதிகம் பரிந்துரை செய்வதே இதன் நோக்கத்தில் தான் செய்கிறேன்.

ஏழரை சனியின் காலத்தில் நாம் நம்மை மாற்றிக்கொள்வோம் என்று வைத்துக்கொள்வோம் ஏழரை சனி நம்முடைய மனதிற்க்கு தான் நடைபெறும். நம்முடைய மனதை தான் கெடுத்துவிடும் நாம் எப்படி நம்முடைய வாழ்க்கையை மாற்றிக்கொள்ளமுடியும்.

வாழ்க்கையை மாற்றிக்கொள்வதால் ஒரு சில விசயங்கள் நடைபெறும் என்பதை நான் ஏற்றுக்கொள்வேன் ஆனால் பரிகாரத்திற்க்கு என்று நாம் கோவிலை முதலில் நாடிவிட்டு அதன் பிறகு நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளுங்கள். வழிபாடு செய்யாமல் வாழ்க்கையை மாற்றினால் ஒன்றும் நடக்காது.

ஏழரைசனிக்காலத்திற்க்கு என்று மட்டும் இல்லை எல்லா கிரகங்களுக்கும் முதலில் ஒரு வழிபாடு அதன் பிறகு உங்களுக்கு தெரிந்ததை செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: